வருமான வரிஏய்ப்பு: விசாரணை முடிவில் $270 மில்லியன் மீட்பு

வருமான வரிஏய்ப்பு: விசாரணை முடிவில் $270 மில்லியன் மீட்பு

2 mins read
2a1ca782-ffc2-42d8-b56f-62ec2143ad94
-

வர்த்­த­கங்­க­ளி­டம் இருந்து கடந்த மூன்­றாண்­டு­களில் வரு­மான வரி­யா­க­வும் அப­ரா­தங்­க­ளா­க­வும் $270 மில்­லி­யன் மீட்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட 7,000 வர்த்­த­கங்­

க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­குத் தணிக்கை மற்­றும் புலன்

­வி­சா­ர­ணை­க­ளுக்­குப் பின்­னர் இந்­தத் தொகை மீட்­கப்­பட்­ட­தாக ஆணை­யம் நேற்று கூறி­யது.

இவற்­றில் வரி ஏய்ப்பு தொடர்­பாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப் ­பட்ட 398 வர்த்­த­கங்­களும் அடங்­ கும். விசா­ரணை முடி­வில் 75 வர்த்­த­கங்­கள் மீது நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுக்­கப்­பட்­டது.

இவற்றில், 'டைரக்ட் ஃபியூன­ரல் சர்­வி­சஸ்' நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரான ரோலண்ட் டே ஹாய் சூன் என்­ப­வர் சம்­பந்­தப்­பட்ட வரி­ஏய்ப்பு வழக்கு இவ்­வாண்டு பிர­ப­ல­ம­டைந்த ஒன்று.

தமது நிறு­வ­னத்தை பொருள், சேவை வரிக் கட்­ட­மைப்­பில் பதிவு செய்­யத் தவ­றி­ய­தா­க­வும் $427,000 வரு­மான வரி செலுத்­தா­மல் ஏய்க்க முயன்­ற­தா­க­வும் கடந்த செப்­டம்­பர் மாதம் இவர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

மற்­றொரு முக்­கிய வழக்கு 'கிரேஸ் கேஸ்­கட்' நிறு­வன உரி­மை­யா­ளர் கிரேஸ் டே தொடர்­பா­னது. ஏறக்­கு­றைய $56,570 வரி ஏய்ப்பு செய்­ த­தாக இவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

தனி உரி­மை­ நிறு­வ­னங்­க­ளான இவை இரண்­டும் கணக்­கு­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தில் சுணக்­கம் காட்­டி­ய­தாக ஆணை­யத்­தின் சிறு வர்த்­த­கப் பிரிவு துணை ஆணை­யா­ளர் திரு­வாட்டி லோ லீ கிம் கூறி­னார்.

இரு நிறு­வ­னங்­க­ளின் வரு­மான வரிக் கணக்கு சமர்ப்­பித்­த­லி­லும் இதர கணக்கு விவ­கா­ரங்­க­ளி­லும் முரண்­பா­டு­கள் இருந்­ததை ஆணை­யத்­தின் கணக்­காய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­த­தைத் தொடர்ந்து வரி­ஏய்ப்பு விவ­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

கணி­ச­மான பணப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­ளும், ஆவ­ணங்­க­ளைச் சரி­வ­ரப் பரா­ம­ரிக்­கத் தவ­றும் சிறு வர்த்­தக நிறு­வ­னங்­கள் வரி ஏய்ப்புக்கு ஆளாகக் கூடிய அபா­யத்தை எதிர்­நோக்­கு­கின்­றன.

"இதுபோன்ற சிறிய நிறு வனங்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப் படுபவை.

நிறுவன உரிமை குடும்பத்துக்கு உள்ளேயே இருப்பதால் விற்பனை மற்றும் செலவு தொடர்பான ஆவ ணங்கள் போதுமான அளவுக்குப் பராமரிக்கப்படுவதில்லை," என்றார் திருவாட்டி லோ.

"வரிசெலுத்துவோர் பொதுவாக சட்டதிட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்று ஆணையம் நம்பினாலும் ஒருசிலர் வேண்டு மென்றே வரி மோசடியிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகிறார்கள்," என் றார் அவர்.