7,500 மாணவர்கள் முன்னேற உதவும் சிண்டா

7,500 மாணவர்கள் முன்னேற உதவும் சிண்டா

2 mins read
4e2e32d4-e216-4497-a384-d146457790f1
பயனடைந்த மாணவர்கள் சிலருடன் சிண்டா தலைவர் குமாரி இந்திராணி ராஜா மற்றும் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். படம்: சிண்டா -

கல்வி ஆண்டை எதிர்­நோக்­கி­யி­ருக்­கும் வச­தி­கு­றைந்த குடும்ப மாண­வர்­க­ளுக்கு பற்­றுச்­சீட்­டு­கள் தந்து உத­வும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்டு சங்­கத்­தின் (சிண்டா) 'பேக் டு ஸ்கூல்' திட்டத்தில் இவ்­வாண்டு 7,500க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் பய­ன­டைந்­த­னர்.

கடந்த ஆண்­டை­விட 80 விழுக்­காடு கூடுதலான மாண­வர்­கள் பலன்­பெற்­றுள்­ள­னர். சிண்டா வர­லாற்­றில் ஆக அதிக எண்­ணிக்கை­ யி­லான மாண­வர்­க­ளுக்கு உதவி வழங்­கப்­பட்டு உள்­ளது.

பிரோட்­ரிக் உயர்­நிலை பள்­ளி­யில் இடம்­பெற்ற 'பேக் டு ஸ்கூல்' விழாவை தொடங்கி வைத்த சிண்­டா­வின் தலை­வர் இந்­தி­ராணி ராஜா, "ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உத­வு­ வதே சிங்­கப்­பூ­ரின் ஒற்­று­மைப்­பாட்டை வலுப்­ப­டுத்­தும். ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் செழிக்­கக்­கூ­டிய, வெற்­றி­க­ளைத் தழு­வக்­கூ­டிய ஒன்­று­பட்ட எதிர்­கா­லம் கொண்­ட­தொரு நாட்டை உரு­வாக்­க­ வேண்­டும் என்­பதே நமது அனைத்து முயற்­சி­க­ளின் தலை­யாய நோக்­கம் ஆகும்," என்­றார்.

உதவி தேவைப்­ப­டு­வோர் சிண்டா போன்ற சமூக அமைப்­பு­க­ளு­டன் அர­சாங்க அமைப்­பு­க­ளை­யும் தொடர்­பு­கொள்­ளு­மாறு பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரான இந்­தி­ராணி ராஜா கேட்­டுக்கொண்­டார்.

தேசிய வளர்ச்சி, நிதி இரண்­டாம் அமைச்­ச­ரு­மான அவர், 'பேக் டு ஸ்கூல்' முயற்­சி­யா­னது மாண­வர்­க­ளின்­மீது கொண்­டுள்ள நம்­பிக்­கை­யை­யும் மாண­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் உத­வு­வ­தில் சிண்டா கொண்­டுள்ள நீண்­ட­கால ஈடு­பாட்­டை­யும் பிர­தி­ப­லிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

2008ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆண்­டு­தோ­றும் இடம்­பெற்று வரும் 'பேக் டு ஸ்கூல்' உத­வி­ ந­ட­வ­டிக்கை மூலம், எழு­து­பொ­ருள்­கள், பள்ளி கால­ணி­க­ளுக்­கான பற்­றுச்­சீட்­டு­களை மாண­வர்­கள் பெறு­வர். இவ்­வாண்டு $140 மதிப்­பி­லான எழு­து­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­களும் $60 மதிப்­பி­லான காலணி பற்­றுச்­சீட்­டு­களும் கொண்ட உத­விப் பொட்­ட­லங்­கள், டிசம்­பர் 4 வரை ஒன்­பது நாள்­களில் வெவ்­வேறு இடங்­களில் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும். பற்­றுச்­சீட்­டு­களை தரு­வது மட்­டு­மல்ல பேக் டு ஸ்கூ­லின் நோக்­கம் என்று கூறிய சிண்டா தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன், மாண­வர்­க­ளின் தன்­னம்­பிக்­கையை வளர்த்து அவர்­களை வெற்­றி­யா­ளர்­க­ளாக உயர்த்­து­வ­தும் நோக்­கம் என்­றார்.

மூன்­றா­வது முறை 'பேக் டு ஸ்கூல்' பள்ளி உதவி பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறும் 17 வயது வெங்­க­டே­சன் பாரதி கண்­ண­னுக்­கும் அவ­ரது தங்கை வெங்­க­டே­சன் ஜீவ­ஜோ­திக்­கும் அடுத்த ஆண்டு மிக முக்­கி­ய­மான ஆண்­டா­கும். முறையே, ஏ நிலை, ஓ நிலை தேர்­வு­களை எழு­த­வி­ருக்­கும் இரு­வ­ருக்­கும் இப்­பற்­றுச்­சீட்­டு­கள் கூடு­த­லான பாட­நூல்­களை வாங்க உத­வும்.

இவ்­வாண்டு சிண்­டா­வால் புதி­தா­கக் கண்­ட­றி­யப்­பட்ட 3,300 மாண­வர்­கள் அதன் கல்வி, மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளால் பய­ன­டை­ய­வுள்­ள­னர்.

அடுத்த ஆண்டு இளை­யர் மேம்­பாட்­டில் அதிக கவ­னம் செலுத்­த­வி­ருக்­கும் சிண்டா, புதிய திட்­டங்­களை செயல்­ப­டுத்­த­வும் தற்­போ­தைய திட்­டங்­களை மெரு­கூட்­ட­வும் $1.5 மில்­லி­யன் கூடு­த­லாக முத­லீடு செய்து, மொத்­தமாக $12.3 மில்­லி­யன் செல­வி­ட­வுள்­ளது.