அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நம் பாலர் பள்ளி மாணவர்களுக்கு ஓர் ஆர்வத்தை உண்டாக்கினால் அது அவர்களுக்கு பிற்காலத்தில் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபட மிக உதவியாக இருக்கும் என்றார் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன்.
கெனபி@ஜெலிங்கில் நவம்பர் 12ஆம் தேதியன்று நடைபெற்ற 'ஃபியூச்சர் ரெடி ஃபேர்' என்னும் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையளித்தார் வர்த்தக உறவு களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஈஸ்வரன்.
இந்த நிகழ்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், ஆக்கத்திறன், தொழில் முனைவு ஆகியவற்றை உள்ளடக்கும் பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் ஏற்பாடு செய்தது.
சரியான சவால்களைத் தேர்ந்தெடுப்பது மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும்போது அவர் களுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிகாட்டுவர் என்றார் ஆசிரியரான ஸோயி தொ, 31.
நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜாவும் மாணவர்
களின் படைப்புகளைக் காண வந்திருந்தார்.
"பிள்ளைப் பருவத்தில் இருக்கும்போது பல பழக்கவழக்கங்கள் பிள்ளைகளின் மனத்தில் இடம்
பிடிக்கின்றன. அதனால், புத்தாக்கத்திறனில் ஈடுபட சிறு வயதிலேயே ஊக்குவிக்கும்போது தங்களுக்குத் தெரியாதவை பற்றி கேள்வி கேட்கவும் புதியவற்றை முயற்சி செய்யவும் தயங்க மாட்டார்கள்," என்றார் அவர்.
'ஸ்டெமி' பாடத்திட்டம் 12 பாலர் பள்ளிகளில் 2018ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு சவால் அளிக்கவும் அவர்கள் புத்தாக்கச் சிந்தனையைப் பயன்படுத்தி, இச்
சவால்களை சமாளிக்க புதுமையான தீர்வுகளை கண்டுபிடிப்பார்கள் என்ற நோக்கத்தோடு அமல்
படுத்தப்பட்டது.
தற்போது இந்தப் பாடத்திட்டம் 180 பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்குள் 320 பள்ளிகளில் இது செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுக்கவும் ஏறத்தாழ 50,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைவர் என்றும் நம்பப்படுகின்றது.

