மகளிர் தேசிய கூடைப்பந்துப் போட்டி நிறுத்திவைப்பு

மகளிர் தேசிய கூடைப்பந்துப் போட்டி நிறுத்திவைப்பு

1 mins read
629fe9fe-6226-4832-8c68-3249d4a3fd93
-

அல்­ஜு­னிட்­டில் அமைந்­தி­ருக்­கும் சிங்­கப்­பூர் கூடைப்­பந்து நிலை­யத்­தில் சென்ற சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற மக­ளிர் தேசிய கூடைப்­பந்­துப் போட்­டி­யின்­போது அரங்­கில் இருந்த பெரிய மின்­விளக்கு நொறுங்­கி­ய­தால் போட்­டியை நிறுத்த நேரிட்­டது.

சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் இல்லை.

ராடின் மாஸ் சிஎஸ்சி அணி­யும் சிக்­லாப் வொய்ட் அணி­யும் பொரு­திய ஆட்­டத்­தின் நான்­கா­வது பகு­தி­யில் ராடின் மாஸ் அணி 43-47 எனும் எண்­ணிக்­கை­யில் முன்­ன­ணி­யில் இருந்­த­போது விளக்கு தரை­யில் விழுந்து நொறுங்­கி­யது.

சம்­ப­வம் நடந்த அரங்­கம் 'ஸ்போர்ட் சிங்­கப்­பூர்' அமைப்­புக்­குச் சொந்­த­மா­னது. தேசிய அளவிலான பயிற்சிக்கும் லீக் போட்டிகளுக்கும் சிங்கப்பூர் கூடைப்பந்துச் சங்கம் இதை குத்தகைக்கு எடுத்துள்ளது.

திடீ­ரென்று நிறுத்த நேரிட்ட ஆட்­டத்தை மீண்­டும் தொடர்­வ­தற்கு உரிய இடம் குறித்து ஏற்­பாட்­டா­ளர்­கள் ஆலோ­சித்து வரு­வதா­கக் கூறப்­பட்­டது.