நிறுவனம் விசாரணை கோரியது

நிறுவனம் விசாரணை கோரியது

1 mins read
ca85b90d-2df4-49eb-bc98-217df97ec762
-

எம்­ஆர்டி திட்­டத்­து­டன் தொடர்­புடைய சுரங்க, பாதாள பொறியியல் நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர் கிளை நிறு­வ­னம், நீதி­மன்­றத்­தில் தனக்கு எதி­ரான குற்­றச்­சாட்டுகளின் பேரில் விசா­ரணை கோரி­யது.

அந்த நிறு­வ­னம், நிலப் போக்கு ­வ­ரத்து ஆணை­யத்­தின் துணைக் குழும இயக்­கு­நர் ஒரு­வருக்­குச் சுமார் $220,000 லஞ்­சம் கொடுத்து இருப்­ப­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்டுள்ளது.

சைனா ரயில்வே டனல் குரூப் (சிங்­கப்­பூர் கிளை) என்ற அந்த நிறு­வ­னம் மூன்று லஞ்ச குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கிறது.

கடந்த 2018, 2019ஆம் ஆண்டு­களில் ஹென்றி ஃபூ யிங் தை என்­ப­வ­ருக்கு அந்த நிறு­வ­னம் லஞ்­சம் கொடுத்து இருக்­கிறது என்று கூறப்­ப­டு­கிறது.

ஒப்­பந்­தக்­கா­ரர்­கள், துணை ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளி­டம் இருந்து கடன் வடி­வில் ஏறத்­தாழ $1.24 மில்­லி­யனை லஞ்­ச­மாக வாங்­கி­ய­தற்­காக ஃபூவுக்கு 2021 செப்­டம்­ப­ரில் ஐந்­தறை ஆண்டுகாலம் சிறைத்­தண்­டனை கிடைத்தது.