வர்த்தக வாகனங்களை வாங்குவோர் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்கும்போது ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டு வரும் வரிக்கழிவுகள் 2023 ஏப்ரல் 1 முதல் குறைக்கப்பட உள்ளன.
வர்த்தக வாகன கரிம வெளியேற்றத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரிக்
கழிவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கேற்ப, தரவரிசை 'ஏ'யில் இடம்பெற்றுள்ள இலகு ரக மின்சார வர்த்தக வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த $30,000 ஊக்கத்தொகை $15,000 என பாதியாகக் குறைக்கப்படுவதாக அரசாங்க அமைப்புகள் நேற்று தெரிவித்தன.
மேலும், வர்த்தக வாகன கரிம வெளியேற்றத் திட்டம் 2025 மார்ச் 31 வரை மேலும் ஈராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் அவை கூறின.
தரவரிசை 'பி'யில் இடம்பெற்றுள்ள வாகனங்களுக்கான வரிக்
கழிவு $10,000லிருந்து $5,000ஆகக் குறையும்.
அதேநேரம் அதிகக் காற்று மாசை ஏற்படுத்தக்கூடிய வாகனங்கள் இடம்பெற்று உள்ள தரவரிசை 'சி'க்கான வழிக்கழிவு $10,000 லிருந்து $15,000க்கு உயர்த்தப்படுகிறது.
வர்த்தக வாகன கரிம வெளியேற்றத் திட்டத்தில் மாற்றங்கள் நிகழக்கூடும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டிருந்தது.
தரவரிசை 'ஏ'யில் இடம்பெற்றுள்ள வாகனங்களுக்கான வரிக்
கழிவு $10,000 வரை குறைக்கப்படலாம் என்று அச்செய்தி அப்போது குறிப்பிட்டது.
அப்போது அந்தச் செய்தி வாகனத் துறையில் அதிர்ச்சியை ஏற்
படுத்தியது.
வாகனங்களை வாங்குவோரும் விற்போரும் மின்சார வாகனங்
களுக்கு மாறத் தயாராகி வரும் வேளையில் ஊக்கத்தொகையை வெட்டுவது காற்றுத் தரத்தை மேம்
படுத்தும் சிங்கப்பூரின் இலக்கில் எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று சிலர் கூறினர்.
மின்சாரத்திலான வர்த்தக வாகனங்களுக்கு தொடக்கவிலை அதிகமாக இருக்கிறது என்று வாகனத் துறையினர் கவலைப்படுவதை கவனத்தில் கொள்வதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து உள்ளது.
தரவரிசை 'ஏ'க்கான ஊக்கத்தொகையை அதிகமாகக் குறைக்காமல் கணிசமான அளவில் குறைத்திருப்பதாகவும் நேற்று நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் வாரியம் கூறியது.
அடுத்த ஆண்டு முதல், கிலோமீட்டருக்கு 123 கிராம் கரிமத்தை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமே தரவரிசை 'ஏ'யில் சேர்க்கப் படும். தற்போது அந்த அளவு கிலோமீட்டருக்கு 150 கிராம் என்று உள்ளது.

