வடக்கு-கிழக்குத் தடத்தில் ரயில் சேவை தாமதம்

வடக்கு-கிழக்குத் தடத்தில் ரயில் சேவை தாமதம்

1 mins read
7144c497-5b5b-45dd-a312-67aded6dc524
-

சமிக்­ஞைக் கோளாறு கார­ண­மாக வடக்கு-கிழக்கு ரயில் பாதை­யில் பூன் கெங் - பொத்­தோங் பாசிர் நிலை­யங்­க­ளுக்கு இடையே நேற்று மாலை ரயில் சேவை தடை­பட்­டது.

இத­னை­ய­டுத்து, பயண நேரம் பத்து நிமி­டங்­கள் அதி­க­மா­கும் என்று மாலை 6.37 மணிக்கு எஸ்­பி­எஸ் நிறு­வ­னம் டுவிட்­டர் வழி­யா­கத் தெரி­வித்­தது.

அதன்­பின் 6.53 மணிக்கு வெளி­யிட்ட பதி­வில், பயணிகள் கூடுதலாக 20 நிமி­டங்­கள் பய­ணம் செய்ய வேண்டி­யி­ருக்­கும் என எதிர்­பார்க்­க­லாம் என்று அந்­நி­று­வனம் கூறி­யது.

சேவைத் தடை­யைத் தொடர்ந்து, ஹார்­பர்­ஃபி­ரண்ட் - ஃபேரர் பார்க் நிலை­யங்­க­ளுக்கு இடையே குறிப்­பிட்ட பேருந்து நிறுத்­தங்­களில் இல­வ­சப் பேருந்து சேவை வழங்­கப்­பட்­டது.

மாலை நேரத்­தில் சேவைத் தாம­தம் ஏற்­பட்­ட­தால் ரயில் நிலைய நடை­மே­டை­யில் நகர இட­மின்றி கூட்­டம் நிரம்பி வழிந்­த­தாக 'டாடா எஸ்­எம்ஆர்டி' என்ற ஃபேஸ்புக் பக்­கத்­தில் ஒரு­வர் பதி­விட்­டி­ருந்­தார்.

பின்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஹார்பர்ஃபிரண்ட், ஊட்ரம் பார்க், சைனாடவுன், டோபி காட், லிட்டில் இந்தியா, சிராங்கூன் ஆகிய நிலையங்களில் மற்ற ரயில் பாதைகளை நாடுமாறு எஸ்பிஎஸ் கேட்டுக்கொண்டது.