துவாசில் 'ரெஸ்மெட்' நிறுவனத்தின் ஆகப் பெரிய மருந்தாலை

துவாசில் 'ரெஸ்மெட்' நிறுவனத்தின் ஆகப் பெரிய மருந்தாலை

1 mins read
6911679a-0e22-4029-8aed-a6161ff1f7cf
-

உல­க­ளா­விய மருத்­து­வத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'ரெஸ்­மெட்' அதன் ஆகப் பெரிய மருந்து உற்­பத்­தித் தொழிற்­சா­லையை நேற்று சிங்­கப்­பூ­ரில் தொடங்­கி­யுள்­ளது.

துவா­சில் 270,000 சதுர அடி பரப்­ப­ள­வில் இது அமைந்­துள்­ளது. இங்கு தூக்­கப் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்­கான மருந்­து­கள் தயா­ரிக்­கப்­படும்.

2025ஆம் ஆண்­டுக்­குள் 250 மில்­லி­ய­னுக்கு அதி­க­மா­னோ­ருக்­குத் தேவைப்­படும் மருந்­து­களை இது தயா­ரிக்­கும். சிங்­கப்­பூ­ரில் ஏறத்­தாழ 2.3 மில்­லி­யன் பேர் 'ஸ்லீப் ஏப்­னியா' எனும் தூக்­கப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் தூங்­கும்­போது பல முறை சுவா­சம் தடைப்­பட்டு, மீண்­டும் தொட­ரும்.

திறப்­பு­வி­ழா­வில் மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் (படம்), சிங்­கப்­பூ­ருக்­கான ஆஸ்­தி­ரே­லி­யத் தூதர் வில்­லி­யம் ஹாட்க்­மேன், சிங்­கப்­பூ­ருக்­கான அமெ­ரிக்­கத் தூதர் ஜோன­தன் கப்­லான் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்