தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகள் இம்மாதம் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது.
உடல்நலமில்லாத மாணவர்கள் பள்ளிக்குச் சென்று தேர்வு முடிவுகளை வாங்குவதைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு வாரியத்தின் இணையவாசலில் இம்மாதம் 23ஆம் தேதி காலை 11.45 மணியில் இருந்து அடுத்த மாதம் 6ஆம் தேதி இரவு 11.59 மணி வரை மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைக் காண இயலும். தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளுடன், தகுதிபெற்ற மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளிச் சேர்க்கைக்கான தெரிவுப் பட்டியல் வழங்கப்படும்.
இம்மாதம் 23ஆம் தேதி காலை 11.30 மணியில் இருந்து 29ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவர்கள் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கான பட்டியலை இணையம்வழி சமர்ப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடையே மாணவர்கள் எந்த உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்படும்.

