பேங்காக் 'ஏபெக்' மாநாட்டில் பிரதமர் லீ

பேங்காக் 'ஏபெக்' மாநாட்டில் பிரதமர் லீ

1 mins read
c473b8d3-9d4f-4f56-b4cd-1e7c1591f42a
-

பிர­த­மர் லீ சியன் லூங், இன்று முதல் நாளை மறு­நாள் வரை தாய்­லாந்­துத் தலை­ந­கர் பேங்­காக்­கில் நடை­பெ­றும் 29வது ஆசிய-பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு நாடு­களின் தலை­வர்­கள் மாநாட்­டில் (ஏபெக்) கலந்துகொள்­கி­றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பாப்­புவா நியூ கினி­யில் நடை­பெற்ற ஏபெக் உச்சநிலை மாநாட்­டிற்­குப் பிறகு ஏப்­பெக் தலை­வர்­கள் இதில் நேர­டி­யா­கக் கலந்­து­கொள்­வது இதுவே முதல்­முறை.

இவ்­வாண்டு மாநாட்­டிற்­குத் தாய்­லாந்­துப் பிர­த­மர் பிரயுத் சான் ஓ சா தலைமை வகிப்­பார். மாநாட்­டில் உல­கப் பொரு­ளி­யலை விரைந்து மீட்­ப­தற்­கு­ரிய வழி­கள் குறித்­துத் தலை­வர்­கள் கலந்­தா­லோ­சிப்­பர் என்று சிங்­கப்­பூர்ப் பிர­த­மர் அலு­வக அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.