புதிய 90 மீட்டர் உயர தீயணைப்பு, மீட்பு வாகனம்

புதிய 90 மீட்டர் உயர தீயணைப்பு, மீட்பு வாகனம்

1 mins read
f3fbb83a-bac4-46ad-a227-9dfabc1525c9
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் இந்த வாகனம் 30 மாடி உயரக் கட்டடத்திற்கு இணையானது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் குடிமைத் தற்காப்புப் படை, 90 மீட்­டர் உய­ரத்­திற்கு நீளக்­கூ­டிய தீ, உயிர் மீட்பு வாக­னத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்ளது.

காலாங், பொங்­கோல் தீயணைப்பு நிலை­யங்­களில் அடுத்த ஆண்டு முதல் இத்­த­கைய இரண்டு வாக­னங்­கள் சேவை­யில் இணை­யும். மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பணித்­திட்­டக் கருத்­த­ரங்­கில் இது­கு­றித்து அறி­விக்­கப்­பட்­டது.

வாக­னத்­தில் தீய­ணைப்­பாளர்­கள் நிற்­கக்­கூ­டிய தளம் 500 கிலோ எடை வரை தாங்­கும். நிமி­டத்­திற்கு 3,800 லிட்­டர் தண்­ணீ­ரைப் பீய்ச்சி அடிக்­கும் வசதி இதில் உள்­ளது.

குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் தற்­போ­தைய வான்­வழி தீய­ணைப்பு, மீட்­புப் பணி­களை 34 மீட்­டர் முதல் 60 மீட்­டர் உய­ரம் வரை மட்­டுமே மேற்­கொள்ள முடி­யும்.

புதிய வாக­னத்தை உள்­து­றைக் குழு­வின் அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்பு உரு­வாக்கி உள்­ளது.

குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் செயல்­பாட்­டுத் தயார் நிலை­யை­யும் உய­ர­மான இடங்­களில் தீ விபத்­து­களை எதிர்­கொள்­ளும் திற­னை­யும் மேம்­ப­டுத்திக்கொள்ள இந்த வாக­னம் கைகொ­டுக்­கும் என்று கருதப்படுகிறது.