நால்வர்மீது குற்றச்சாட்டு

2 mins read
09a5c886-9aaf-4ce8-95db-890f1b02950b
-

'ஹைஃபிளக்ஸ்' நிறுவன முன்னாள் உயரதிகாரிகள்மீது நடவடிக்கை

'ஹைஃபிளக்ஸ்' நிறு­வ­னத்­தைத் தோற்­று­வித்­த­வ­ரும் அதன் முன்­னாள் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான ஒலி­வியா லம் உய் லின் (படம்), அதன் முன்­னாள் தலைமை நிதி அதி­காரி சோ வீ பெங், முன்­னாள் இயக்­கு­நர்­கள் நால்­வர் ஆகி­யோர்­மீது பங்­குச் சந்தை மோசடி தொடர்­பி­லான 'செக்­யூ­ரிட்­டிஸ் அண்ட் ஃபியூச்­சர்ஸ்' சட்­டத்­தின்­கீழ் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­ன­மான 'ஹைஃபிளக்ஸ்' மூடப்­பட்டு 17 மாதங்­கள் ஆன நிலை­யில் இவ்­வாறு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. நிறு­வ­னம் மூடப்­பட்­ட­தால் ஏறக்­கு­றைய 34,000 முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு மொத்­தம் 900 மில்­லி­யன் வெள்ளி நட்­டம் ஏற்­பட்­டது.

'துவாஸ் ஸ்பி­ரிங்' ஒருங்­கி­ணைந்த தண்­ணீர், எரி­சக்­தித் திட்­டம் தொடர்­பான முக்­கி­யத் தக­வல்­களை வெளி­யிட மறுத்­த­தன் தொடர்­பில் இந்த உய­ர­தி­கா­ரி­கள் ஆறு பேர் மீதும் குற்­றம் சுமத்­தப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

61 வய­தா­கும் திரு­வாட்டி லம், 100,000 வெள்­ளி பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தை­ விதி­மு­றை­க­ளின்­கீழ் 'துவாஸ் ஸ்பி­ரிங்' சுத்­தி­க­ரிப்பு ஆலை 'ஹைஃபிளக்ஸ்' நிறு­வ­னத்­தின் கிளை நிறு­வ­னம் என்­ப­தை­யும் அது மின்­சா­ரத்தை விற்­ப­தன் மூலம் ஈட்­டும் வரு­வாய் மூலமே லாபம் ஈட்ட முடி­யும் என்­ப­தை­யும் வேண்­டு­மென்றே வெளி­யி­டா­மல் மறைத்த குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் இவ­ருக்கு ஏழு ஆண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ 250,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

'ஹைஃபிளக்ஸ்' நிறு­வ­னத்­தின் கடன் உடன்­ப­டிக்கை குறித்து ஆண்­டுப் பொதுக்­கூட்­டத்­தில் தக­வல் தெரி­விக்­கா­த­தால், நிறு­வ­னச் சட்­டத்­தின்­கீ­ழும் அவர்­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

சோ வீ பெங் 160,000 வெள்­ளிப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். குற்­றம் சாட்­டப்­பட்ட மற்ற நால்­வர் 66 வயது டியோ கியாங் கோக், 63 வயது கிறிஸ்­டோ­ஃபர் முரு­கேசு, 66 வயது கே சீ சியோங், 65 வயது ராஜ­சே­கர் குப்­பு­சாமி மிட்டா ஆகி­யோர். இந்­நால்­வர்­ மீ­தும் ஆளுக்கு இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. டியோ­வும் கேயும் தனித்­த­னியே 160,000 வெள்ளி பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர். மிட்டா 240,000 வெள்ளி பிணை­யி­லும் முரு­கேசு 80,000 வெள்ளி பிணை­யி­லும் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.