பங்ளாதேஷில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வாய்ப்பு; சிங்கப்பூர்-பங்ளாதேஷ் உடன்பாடு

பங்ளாதேஷில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வாய்ப்பு; சிங்கப்பூர்-பங்ளாதேஷ் உடன்பாடு

2 mins read
255b23eb-5031-418d-a1be-d62292ed7215
-

சிங்­கப்­பூ­ரும் பங்­ளா­தே­ஷும் புதுப்­பிக்­கப்­பட்ட எரி­பொ­ருள் உள்­ளிட்ட துறை­களில் வர்த்­தக, முத­லீட்டை வலுப்­ப­டுத்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரான எஸ். ஈஸ்­வ­ர­னும் பங்­ளா­தேஷ் வர்த்­தக அமைச்­ச­ரான திபு முன்­ஷி­யும் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

திரு ஈஸ்­வ­ரன், இம்­மா­தம் 15 முதல் 17ஆம் தேதி வரை தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளுக்கு பய­ணம் மேற்­கொண்­ட­போது இந்த ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது என்று வர்த்­தக, தொழில் அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

புதிய ஒப்­பந்­தத்­தின்­கீழ் இரு நாடு­க­ளைச் சேர்ந்த மூத்த அதி­கா­ரி­கள் குழு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­படும். இந்­தக்­குழு, புதுப்­பிக்­கப்­படும் எரி­பொ­ருள், தள­வா­டம், வர்த்­த­கம் போன்ற துறை­களில் உள்ள வாய்பு­ க­ளைக் கண்­ட­றிந்து வர்த்­தக, முத­லீட்டை பெருக்க உத­வும்.

இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான ஒப்­பந்­தம், பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­புக்­கான முக்­கிய மைல்­கல் என்று திரு ஈஸ்­வ­ரன் வர்­ணித்­தார். 2030ஆம் ஆண்­டில் உல­கின் 30 பெரிய பொரு­ளி­யல் நாடு­களில் ஒன்­றாக பங்­ளா­தேஷ் திக­ழும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இத­னால், பங்­க­ளா­தே­ஷின் வளர்ச்சி வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய சந்­தையை விரி­வு­ப­டுத்த முடி­யும் என்­றார் அவர்.

2011க்கும் 2021க்கும் இடையே ஆறு முதல் ஏழு விழுக்­காடு பொரு­ளி­யல் வளர்ச்­சி­யு­டன் பங்­க­ளா­தேஷ் அதி­வே­கத்­தில் வளர்ச்­சி­ய­டை­யும் நாடாக இருக்கிறது.

"இருதரப்பு பொரு­ளி­யல் உறவை வலுப்­ப­டுத்­த­வும் பரஸ்­பர நலன்­க­ளுக்­கும் பங்­ளா­தே­ஷு­டன் சேர்ந்து செயல்­பட ஆவ­லு­டன் இருக்­கி­றோம்," என்று கூறிய அமைச்­சர் ஈஸ்­வ­ரன், ஏற்­கெ­னவே பல சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள அங்கு தளம் அமைத்­துள்­ளதை சுட்­டிக்­காட்­டி­னார்.

திரு ஈஸ்­வ­ரன் தனது பய­ணத்­தின்­போது பங்­ளா­தேஷ் பிர­த­ம­ரின் தனி­யார் துறை, முத­லீட்டு ஆலோ­ச­க­ரான சல்­மான் எஃப் ரஹ்­மான், தக­வல் தொடர்பு தொழில்­நுட்ப துணை அமைச்­சர் ஸுனைட் பலக், பிர­த­மர் ஷேக் ஹசினா மற்­றும் அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்து பேசி­னார்.

இதற்­கி­டையே, எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் வர்த்­தக சம்­மே­ள­னம் ஏற்­பாட்­டில் சிங்­கப்­பூர் பேரா­ளர் குழு, தங்­க­ளு­டைய வர்த்­த­கப் பய­ணத்­தில் பல அர­சாங்க அமைப்­பு­க­ளின் அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்­த­னர். இந்­தப்­ பே­ரா­ளர்­கள் குழு, டாக்­கா­வில் உள்ள பல்­வேறு இடங்­க­ளை­ சுற்­றிப் பார்த்­தது.

வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான எஸ். ஈஸ்வரனும் பங்ளாதேஷ் வர்த்தக அமைச்சர் திபு முன்ஷியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

படம்: எஸ்ஜிபிசி.கவ்.எஸ்ஜி