சீர்திருத்த ஆணை; பல இடங்களில் குப்பை அகற்றம்

சீர்திருத்த ஆணை; பல இடங்களில் குப்பை அகற்றம்

1 mins read
ca24188a-18d3-43dd-802f-b09ec5fa685e
திருத்த வேலை உத்தரவின்கீழ் நகர்ப்புறத்தில் குப்பை அகற்றும் நடவடிக்கை சைனாடவுன், தஞ்சோங் பகார் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. படம்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு -

பொது இடங்­களில் குப்பை போடு­வோர் இனி இளஞ்­சி­வப்­பும் மஞ்­ச­ளும் கலந்த மேல் அங்கி அணிந்து சிங்­கப்­பூ­ரின் நகர்ப்­புற வீதி­க­ளைச் சுத்­தம் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். திருத்த வேலை உத்­த­ர­வின்­கீழ் குப்பை அகற்­றும் பணியை அதி­கா­ரி­கள் கூடு­த­லான இடங் களுக்கு விரி­வு­ப­டுத்­தி­யி­ருப்­பது இதற்­குக் கார­ணம்.

சைனாடவுன் பகு­தி­யில் சென்ற செவ்­வாய்க்­கி­ழ­மை­யும் தஞ்­சோங் பகா­ரில் வியா­ழக்­கி­ழ­மை­யும் இத்­த­கைய சீர்திருத்த ஆணையின்­கீழான குப்பை அகற்­றும் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது.

குப்பை போடு­வ­தன் பின்­வி­ளை­வு­க­ளைத் தெளி­வாக உணர்த்துவது இந்த நட­வ­டிக்­கை­யின் நோக்­கம் என்று தேசிய சுற்­றுப்­புற வாரியம் தெரி­வித்­தது.

திருத்த வேலை உத்­த­ர­வின்­கீழ், விதி­மு­றை­களை மீறி குப்பை போடு­வோர் மூன்று முதல் 12 மணி நேரத்­துக்­குப் பொது இடங்­க­ளைச் சுத்­தம் செய்­ய­வேண்­டும்.

குப்பை போடு­த­லின் தாக்­கம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­ வ­தும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளின் சிர­மத்­தைப் புரிந்­து­கொள்ள வகை­ செய்­வ­தும் இதன் நோக்­கமாகும்.

கடந்த 2017 முதல் சென்ற ஆண்டு வரை, ஆண்­டுக்கு சரா­ ச­ரி­யாக 27,200 பேருக்கு குப்பை போட்­ட­தற்­காக அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏறக்­கு­றைய 10,200 பேருக்கு திருத்த வேலை உத்­த­ரவு பிறப்­பிக்கப்­பட்­டுள்­ளது.

வீசப்­படும் குப்­பை­களில் அதி­க­மா­னவை சிக­ரெட் துண்­டு­கள். குப்பை போடு­வோ­ரில் பெரும்­பா­லோர் 18 முதல் 35 வயது வரை­யி­லான ஆண்­கள் எனத் தெரிய வந்துள்ளது.

முதல்­முறை குப்பை போட்­டால் $300 அபராதம் விதிக்கப்படும்.

மறு­முறை போடு­வோ­ருக்­கும் உயர்­மாடி­களில் இருந்து குப்பை போடு­வோ­ருக்­கும் நீதி­மன்­றத்­தில் அப­ரா­தத்­து­டன் திருத்த வேலை உத்­த­ர­வும் பிறப்­பிக்­கப்­படும்.