சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரே லியாவின் மெல்பர்ன் நகருக்குச் சென்ற குவாண்டாஸ் விமானத்தில் மூவருக்கு தட்டம்மை பாதிப்பு இருந்ததாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம் நேற்று தெரிவித்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டனர். நவம்பர் 14ஆம் தேதி அவர்கள் குவாண்டாஸ் 'QF36' விமானத்தில் பயணம் செய்தனர்.
இருவருக்கு தட்டம்மை தொற்று பரவக்கூடிய நிலையில் இருந்ததால் அவர்களுக்கு உடனடி யாக உதவி வழங்கப்பட்டது.
இவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பர்ன் விமான நிலையமும் தட்டம்மை சம்பவங்கள் கண்டறியப்பட்ட இடங்களாக விக்டோரியா அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி நவம்பர் 15ஆம் தேதி காலை 6.10 மணியிலிருந்து காலை 8.40 மணி வரையில் இந்த இரு இடங்களில் இருந்தவர் களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி நாட வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் குடும்பம் மெல்பர்னில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
அந்தக் குடும்ப உறுப்பினர் களின் வயது குறித்த விவரம் எதுவும் வெளியிடப்பட வில்லை.

