தன்னலம் பாராத சமூக சேவையாளர்களுக்கு விருது

தன்னலம் பாராத சமூக சேவையாளர்களுக்கு விருது

1 mins read
9bc4467c-8c72-4d65-b88a-3b520ad65cd1
மற்­ற­வர்­க­ளுக்கு உத­வு­வ­தையே வாழ்க்­கைத் தொழி­லா­கக் கொண்ட கேரன் குவா (நடு­வில்) மற்­றும் நம்­ப­க­மான சமூக சேவை­யா­ளர் விருது பெற்ற ஜேனல் லியாம்(இடம்), பெகி லிம் (வலம்). படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தன்­ன­லம் பாரா­மல் சமூ­கத்­துக்­குப் பங்­காற்­றிய சமூக சேவை ஊழி­யர்­கள் நேற்று விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

இஸ்­தா­னா­வில் நடை­பெற்ற சிறந்த சமூக சேவை­யா­ளர் விருது நிகழ்ச்­சி­யில் ஆக்­க­ கரமான முறை­யில் செயல்­பட்ட மேலும் இரு­வ­ருக்கு நம்பகமான சமூக சேவை­யா­ளர்­கள் விருது வழங்­கப்­பட்­டது.

விருது பெற்­ற­வர்­களில் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் மூத்த முதன்மை மருத்­துவ சமூக சேவை­யா­ள­ராக பணியாற்­றும் 44 வயது கேரன் குவா­வும் ஒரு­வர்.

தனது தந்தை சிறைத் துறையில் பணி­யாற்­றி­ய­போது கைதி­களுக்கு உதவியதைப் பார்த்து தனக்­கும் உதவி செய்­யும் மனப்­பான்மை ஏற்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

அதையே தனது வாழ்க்­கைத் தொழி­லா­க­வும் அவர் மேற்­கொண்டு வரு­கி­றார்.

இரு­பது ஆண்­டு­க­ளாக சமூக சேவை­யா­ள­ராக பணி­யாற்றி வரும் இவர், சில வேளை­களில் மிகுந்த களைப்­பாக இருந்­தா­லும் தன்­னு­டைய பணியை தொடர்ந்து செய்து மற்­ற­வர்­கள் வாழ்க்­கை­யில் மாற்றத்தை ஏற்­ப­டுத்­தப் போவ­தாக உறுதி கூறி­யுள்­ளார்.

அனைவரும் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சூல்கிஃப்லியும் பங்கேற்றார்.