monolisa@sph.com.sg
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மறுபயனீட்டுப் பொருள்களால் ஆன கிறிஸ்மஸ் மரங்களின் கண்காட்சி, 'சிட்டி ஸ்குவேர்' கடைத்தொகுதியில் நடைபெற்று வருகிறது.
நீடித்த நிலைத்தன்மையை ஆதரிக்கும் நோக்கில் நேற்று துவங்கப்பட்ட இக்கண்காட்சி, அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும்.
'இன்டு த கார்டன் ஆஃப் ஈகோ கிறிஸ்மஸ் டிரீஸ்' (Into the Garden of Eco Christmas Trees) என்ற கருப்பொருளில் அமைந்த கண்காட்சியில் மறுபயனீட்டுப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 12 கிறிஸ்மஸ் மரங்கள் இடம்பெற்றுள்ளன.
இம்மரங்களை தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த 400க்கும் அதிகமான மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட நெகிழித் தண்ணீர்க் குடுவைகள், மரப்பலகைகள், குடைகள், துணிகள், பழைய அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் இம்மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்பொருள்களை கடைத்தொகு தியின் 'என்டியுசி ஃபேர்பிரைஸ்', 'வாட்சன்ஸ்', 'ஸ்டார்பக்ஸ்', 'டிகெத்லோன்' ஆகிய வர்த்தகங்கள் வழங்கியுள்ளன.
மறுபயனீட்டுப் பொருள்களால் அதிக எண்ணிக்கையில் காட்சிப்
படுத்தப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரங்கள் என்பதால் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்திலும் இம்முயற்சி இடம்பெற்றுள்ளது.
இதில் பங்கேற்ற தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி சுகாசினி ராஜ், 21, தன் குழுவுடன் இணைந்து எஞ்சிய பழைய துணி
களால் ஒரு கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கியுள்ளார்.
ஆடை வடிவமைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் இரண்டாம் ஆண்டு கல்வி பயிலும் இவர், அனைத்துத் துணித் துண்டுகளையும் 'டை' (Tie) எனப்படும் கழுத்துப் பட்டை வடிவில் வெட்டி இம்மரத்தை வடிவமைத்துள்ளார்.
'டை' என்ற ஆங்கில வார்த்தைக்குக் கோத்தல் என்ற பொருள் என்பதால் சிங்கப்பூரர்கள் அனை
வரும் இம்மறுபயனீட்டுப் புரட்சியில் கைகோத்து செயல்படவேண்டும் என்பதை மறைமுகமாக இம்முயற்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
சக மாணவர்களுடன் இணைந்து இதனை உருவாக்கியது ஒற்றுமையுணர்வைத் தூண்டியதோடு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்ததாகவும் கூறினார்.
இதற்கிடையே, பார்வையாளர்கள் கியூஆர் குறியீட்டை வருடி, தங்களுக்குப் பிடித்தமான மரத்திற்கு வாக்களிக்கலாம். இதற்கான இறுதி நாள் டிசம்பர் 18. டிசம்பர் 21ஆம் தேதியன்று சமூக ஊடகப் பக்கங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

