$3.7 மில்லியன் மோசடி கள்ளப் பணம்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

$3.7 மில்லியன் மோசடி கள்ளப் பணம்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
4b99bbeb-298d-4b25-a410-e1aed3441798
-

பல்­வேறு மோச­டி­களில் $3.7 மில்­லி­ய­னுக்கு மேல் பணம் பறி­போன விவ­கா­ரத்­தில் சம்­பந்­த­தப்­பட்ட ஆட­வர் ஒரு­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது. முகம்­மது தார்­மிட்ஸி தாஹிர், 33, எனப்­படும் அவர் இம்­மா­தம் 7ஆம் தேதி ஜோகூ­ரில் கைது செய்­யப்­பட்­டார்.

மோச­டிப் பணத்­தைப் பங்­கிட்டுக்­ கொள்ள தமது வங்­கிக் கணக்கை பிறர் பயன்­ப­டுத்த அனு­ம­தித்­த­தாக ஒரு குற்­றச்­சாட்­டும் இரு மோச­டிக் குற்­றச்­சாட்­டு­களும் அவர் மீது சுமத்­தப்­பட்­டன. வங்­கி­யின் கணி­னிக் கட்­ட­மைப்பை அனு­ம­தி­யின்றி பயன் ­ப­டுத்த உத­வி­ய­தற்­காக கணினி முறை­கேட்­டுச் சட்­டத்­தின்­கீ­ழும் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

எல்லை கடந்த மோச­டிக் கும்­ப­லைப் பிடிக்க சிங்­கப்­பூர் வர்த்­தக விவ­கா­ரத் துறை அதி­கா­ரி­களும் ஜோகூர் வர்த்­தக் குற்­றப் புல­னாய்­வுத் துறை அதி­கா­ரி­களும் இணைந்து நடத்­திய வேட்­டை­யில் இவர் சிக்­கி­னார். அங்­குள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தில் பிடி­பட்ட இவர், பத்து நாள்­க­ளுக்­குப் பிறகு சிங்­கப்­பூர் காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

கடந்த ஜன­வரி 19ஆம் தேதி ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்­கி­யில் தமது சொந்­தப் பயன்­பாட்­டுக்­காக கணக்­குத் திறப்­ப­தா­கக் கூறி வங்­கியை நம்­ப­வைத்­தார். பின்­னர் தமது இணைய வங்கி உள்­நு­ழைவு விவ­ரங்­க­ளைப் பிற­ரு­டன் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

இது­போல ஜன­வ­ரி­யி­லும் பிப்­ர­

வ­ரி­யி­லும் பல்­வேறு தடவை அனு­

ம­தி­யின்றி வங்­கிக் கட்­ட­மைப்­புக்­குள் அவர்­கள் ஊடு­ரு­வி­னர். இதே­போன்ற குற்­றத்தை சிஐ­எம்பி வங்­கி­யி­லும் கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்­களில் அவர் செய்­த­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டது. மோச­டி­களில் திரட்­டிய கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றும் குற்­றத்­திற்கு முகம்­மது தார்­மிட்ஸி பொறுப்­பேற்றுக்கொண்டார் என்று சிங்­கப்­பூர் காவல்­துறை தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் புகார் செய்­யப்­பட்ட முத­லீட்டு மோசடி, வேலை மோசடி, நண்­பர்போல ஆள்­மா­றாட்ட மோசடி, அர­சாங்க அதி­காரிபோல ஆள்­

மா­றாட்ட மோசடி, கடன் மோசடி போன்­ற­வற்­றி­லும் இ மோச­டி­களில் சிக்கி 50க்கும் மேற்­பட்­டோர் பண­மி­ழந்த விவ­கா­ரத்­தி­லும் இவ­ருக்­குத் தொடர்­பி­ருப்­ப­தாக காவல்­து­றை­யின் அறிக்கை குறிப்­பிட்­டது.மோச­டிக் கும்­பல் கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றும் முயற்­சி­க­ளுக்கு ஃபேஸ்புக், டெலி­கி­ராம் போன்­ற­வற்­றைப் பயன்­

ப­டுத்தி சிங்­கப்­பூர் வங்­கி­களில் இவர் கணக்­குத் தொடங்­கி­ய­தாக ஆரம்­பகட்ட விசா­ர­ணை­யில் தெரி ­ய­வந்­துள்­ள­தா­க­வும் அது கூறி­யது.

இந்த வழக்கு நம்­ப­வம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்­கப்­பட்டுள்­ளது. மோச­டிக் குற்­றம் ஒவ்­வொன்­றுக்­கும் மூன்­றாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். கணினி முறை­கேட்­டுச் சட்­டத்­தின்­கீ­ழான ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் முதல்­மு­றை­யா­கத் தண்­டிக்­கப்­ப­டு­வோ­ருக்கு ஈராண்டு வரை­ சிறைத் தண்­டனை, $5,000 வரை­ அப­ரா­தம் போன்­றவை விதிக்­கப்­ப­ட­லாம். இந்­தக் குற்­றத்தை மீண்­டும் செய்­வோ­ருக்கு மூன்­றாண்டு வரை­யி­லான சிறை­யும் $10,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.