காற்பந்து சங்கத்தில் மோசடி: 4 மாத சிறை

காற்பந்து சங்கத்தில் மோசடி: 4 மாத சிறை

2 mins read
a668b48b-493d-45ab-aba0-f9e0da441a1a
-

சிங்­கப்­பூர் காற்­பந்து சங்­கத்தை ஏமாற்­றிய குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட ஆட­வ­ருக்கு நேற்று நான்கு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 45 வய­தான சங்­கர் சுப்­பையா தம் மீது சுமத்­தப்­பட்ட ஐந்து மோசடி குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­டார்.

அவர் 'ஆல் ரிசோர்ஸ் நெட்­வொர்க்' (ஏஆர்­என்) நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ராக இருந்­தார்.

குற்­றங்­கள் புரிந்த நேரத்­தில், இந்த நிறு­வ­னம் சிங்­கப்­பூர் காற்­பந்து சங்­கத்­தின் விநி­யோ­கிப்­பா­ள­ராக இருந்­தது. சிங்­கப்­பூர் காற்­பந்து சங்­கத்­தின் துணை இயக்­கு­நர் ரிக்­ரம் ஜித் சிங், 42, வணிக மேம்­பாட்­டைக் கையாண்­டார்.

அவ­ரது மனைவி ஆஸ்யா கிரின் கேம்ஸ், 35, 2014ல் ஏஆர்­என் நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னார்.

ரிக்­ரம் தானும் ஆஸ்­யா­வும் திரு­ம­ணம் செய்து கொள்ள இருப்­ப­தா­க­வும், இத­னால் கட­மைக்­கும் சொந்த நல­னுக்­கும் இடையிலான முரண்பட்டநிலைக்கு இது வழிவிடக்கூடும் என்­றும் அவ­ரின் பால்ய நண்­ப­ரான சங்­க­ரி­டம் கூறி­னார்.

இதை­ய­டுத்து, சங்­கர் நிறு­

வ­னத்­தின் தனி உரி­மை­யா­ள­ரா­கப் பொறுப்­பேற்­றார். இத­னால், முரண்­பா­டு­கள் இல்­லா­மல் சிங்­கப்­பூர் காற்­பந்துச் சங்­கத்­துக்கு தொடர்ந்து விநி­யோ­கிக்க, 2017ஆம் ஆண்­டு சங்­கர் ஏஆர்­என் நிறு­வ­னத்­தின் தலை­வ­ராகப் பொறுப்­பேற்­றதாக அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் விசா­ர­ணை­யின் போது குறிப்­பிட்­டார். ரிக்­ரமின் நண்­ப­ராக, கோரிக்­கையை நிரா­க­ரிக்க முடி­யாது என்று நினைத்த சங்­கர், தான் செய்த வேலைக்கு சம்­ப­ளம் வாங்­க­வில்லை.

ஆஸ்­யா­வும் ரிக்ரமும் ஏஆர்­என் நிறு­வ­னம் பெய­ரில் வங்­கிக் கணக்­கைத் திறக்­கும்­படி சங்­க­ரி­டம் கேட்­டுக்­கொண்­ட­னர். சங்­கர் இந்­தக் கணக்­கின் ஒரே உரி­மை­யா­ள­ராக இருந்­த­போ­தும் ரிக்­ரம் மற்­றும் ஆஸ்யா அதன் கணக்கு வழக்­கு­களை கவ­னித்­துக்­கொண்­ட­னர் என்று விசா­ர­ணை­யில் தெரியவந்தது. சிங்­கப்­பூர் காற்­பந்துச் சங்­கம் மூலம் ஏஆர்­என் நிறு­வ­னம் ஐந்து முறை பெற்ற தொகை $110,500.

2020 டிசம்பரில் ரிக்­ரம், ஆஸ்யா இரு­வர் மீதும் தலா 45 மோசடி குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

இந்தக் குற்­றத்­தில் சங்­கர் பண ரீதி­யா­கப் பலன­டை­ய­வில்லை என்­றும் குற்­றங்­க­ளைச் செய்­த­தற்­காக அவர் வருந்­து­வ­தா­க­வும் மாவட்ட நீதி­பதி கருத்­தில் கொண்­டார்.

மோசடிக் குற்றத்துக்கு மூன்று ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.