வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்துவிட்டு 15 ஆண்டு களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் மீது மேலும் இரு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டேவிட் கோங் சியாக் மெங், 55, எனப்படும் அவர், டேவிட் கோங் அண்ட் அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் உரிமையாளராகவும் வழக் கறிஞராகவும் இருந்தார்.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் 26 முதல் மே 5 வரை பாதிக்கப்பட்டவர் ஒருவர் கொடுத்த $28,000 லிருந்து சுமார் $11,300ஐ கோங் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதே ஆண்டில் இரண்டு பேரிடம் வாங்கிய $33,400 தொகையிலிருந்து சுமார் $14,500ஐ கோங் தவறாகப் பயன்படுத்தினார்.
2007ஆம் ஆண்டு ஜூன் 11க்கும் 25க்குக் இடையில் மேலும் இரு
வருக்குச் சொந்தமான $88,000ஐ தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார் கோங்.
இந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமது கட்சிக்காரரின் $88,000 பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து
2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்ற வழக்கறிஞர், அண்மையில் சீனாவில் பிடிபட்டார்.
சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன், கோங் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். சிங்கப்பூரின் வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

