அரசாங்கத்தின் உபரி நிதி குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்கு திருத்தம் வெளியிடுமாறு அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் பொருளியல் நிபுணர் இயோ லாம் கியோங்கும் 'த இண்டிபென்டண்ட் சிங்கப்பூர்' செய்தித்தளத்துக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பொய்ச் செய்திக்கு எதிரான சட்டத்தின்கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இயோ இம்மாதம் 7ஆம் தேதி தவறான தகவல்கள் அடங்கிய இரு ஃபேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும் இணையத்தளம் அவற்றை கடந்த 9 மற்றும் 12ஆம் தேதிகளில் மறுபிரசுரம் செய்ததாகவும் நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.

