மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு உதவும் வகையில் 140க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மனநலப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுள்ள அந்தப் பயிற்சியாளர்கள் இப்போது தங்கள் சகாக்களுக்கு உதவுவதற்குத் தோதாக சிறப்பு வல்லுநர்களாக ஆகியுள்ளனர்.
தேசிய சமூகச் சேவை மன்றம் இதற்காகச் சிறப்பு வல்லுநர்கள் சக ஆதரவு செயல்திட்டம் என்ற ஒரு திட்டத்தை 2016ல் தொடங்கியது. மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்குப் பயிற்சி மூலம் புதிய தேர்ச்சிகள் போதிக்கப்பட்டு இருக்கின்றன.
அத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கும் மற்றவர்கள் குணமடைய உதவுவதற்கு பொருத்தமாக அவர்கள் உள்ளனர்.
பயிற்சி பெற்றவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் சக ஆதரவு சிறப்பு வல்லுநர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சமூகச் சேவை அமைப்புகளிலும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் தொண்டு செய்வதாக இந்த மன்றத்தின் சேவைகள் துறை இயக்குநர் சிம் ஹுய் டிங் தெரிவித்தார்.

