'ராசல் கேட்டரிங் சிங்கப்பூர்' என்ற நிறுவனம் தயாரித்த உணவை நவம்பர் 8 முதல் 16ஆம் தேதி வரை சாப்பிட்ட மொத்தம் 284 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் வெளிநோயாளி சிகிச்சை பெற்றனர். அல்லது சுயமாக மருந்து எடுத்துக்கொண்டனர். அல்லது சிகிச்சை எதுவுமின்றி குணமடைந்துவிட்டனர் என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு முகவையும் தெரிவித்தன.
எண் 253 பாண்டான் லூப் முகவரியில் செயல்படும் அந்த உணவு விநியோக நிறுவனத்திற்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

