வர்த்தக விதிகள்: நாடுகள் சேர்ந்து பாடுபட வலியுறுத்து

வர்த்தக விதிகள்: நாடுகள் சேர்ந்து பாடுபட வலியுறுத்து

2 mins read
342c71ec-e5c0-4db7-a99c-09ea0997fec0
சிங்கப்பூர்- சீனா இரு நாடுகளும் உறவைப் பலப்படுத்து வதில் மிகவும் நாட்டமாக இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மிக­வும் சவா­லான சூழ­லில் உலக வர்த்­த­கத்­திற்­கான ஒளிவு மறைவு இல்­லாத விதி­களை நோக்கி ஒன்றாகச் சேர்ந்து நாடு­கள் செயல்­பட வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்துள்ளார்.

புதிய விதி­மு­றை­கள் அல்­லது இப்­போ­தைய விதி­மு­றை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை இருக்­கிறது. அதே­வே­ளை­யில், நாடு­கள் இப்­போ­தைய விதி­மு­றை­களை­யும் பின்­பற்றி நடக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

பேங்­காக்­கில் ஏபெக் எனப்­படும் ஆசி­யப் பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு அமைப்­பின் 29வது பொரு­ளி­யல் தலை­வர்­கள் மாநாடு முடிந்த தறுவா­யில் சிங்­கப்­பூர் ஊட­கத்­திற்கு திரு லீ பேட்­டி­ய­ளித்­தார்.

"இத்­த­கைய வர்த்­தக அம்­சங்­களைப் பற்றி விவா­திக்­கக்­கூ­டிய அமைப்­பு­களில் ஒன்­றாக ஏபெக் இருக்­கிறது.

"பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணும் அதே­வே­ளை­யில், ஒரு­வர் மற்­றொரு­வ­ரு­டன் தொடர்ந்து பேசக்­கூ­டிய ஒரு நிலை­யை­யும் ஏபெக் சாத்­தி­ய­மாக்­கு­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்­பை­யும் வளர்ச்­சி­யை­யும் புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள் எந்த அள­வுக்கு பாதித்து இருக்­கின்­றன என்­பது பற்றி கேட்­ட­போது, ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரம் அனைத்­தை­யும் உள்­ளடக்­கும் வகை­யில் முழு­மை­யான தாராள வர்த்­தக மண்­ட­லம் உரு­வா­வ­தற்கு மிக அதி­கக் காலம் பிடிக்­கும் என்­றார் பிரதமர் லீ.

இருந்­தா­லும், தாராள வர்த்­தக இலக்கை நோக்கி ஒரு­வர் மற்­றொரு­வ­ரு­டன் ஒத்­து­ழைக்க வேண்டிய தேவை இருக்­கிறது என்று அவர் கூறினார். "வர்த்­த­கத்தை முக்­கிய அம்­ச­மா­கக் கருதி நாடு­கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வர­வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது.

"நாடு­கள் ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­ப­டு­வ­தற்குத் தேவைப்­ப­டக்­கூடிய விதி­மு­றை­கள் பற்­றி­யும் அவை பேச வேண்­டும்," என்று திரு லீ கூறி­னார்.

வர்த்­த­கத்­தை­யும் முத­லீட்­டை­யும் தாரா­ள­ம­யப்­ப­டுத்­து­வது என்­பது ஏபெக் அமைப்­பின் மூலா­தார நோக்­கம் என்­பதை சுட்­டிய திரு லீ, நாடுகள் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

சிங்­கப்­பூர்-சீனா ஒத்­து­ழைப்பு பற்­றி­ கருத்து கூறிய திரு லீ, இந்த இரு நாடு­களும் நல்ல உற­வைப் பலப்­ப­டுத்தி வந்­தால், பரஸ்­ப­ர நம்பிக்­கையை வலுப்­ப­டுத்தி வந்­தால், இருதரப்பு ஒத்­து­ழைப்­புக்­கான வாய்ப்பு மிக­வும் அக­ல­மாக இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.