தமிழாசிரியர் ஆக வேண்டும் என லட்சியம் கொண்ட சரண்யா

தமிழாசிரியர் ஆக வேண்டும் என லட்சியம் கொண்ட சரண்யா

2 mins read
18c1ee3a-c9f6-4252-9675-948c56167e62
(இடது படம்) முன்னாள் மாணவிசரண்யாவுடன் (நடு) மாணவச்செய்தியாளர்கள் காயத்திரி(இடது), ரோஷ்னி. -
multi-img1 of 2

முன்­னாள் மாண­வர் ஒரு­வரை நேர்­கா­ணல்­வழி சந்­திக்க வேண்­டும் என நாங்­கள் யோசித்­த­போது, முன்­னாள் மாண­வ­ரான சரண்யா முசிலா, 18, என்­ப­வர் எங்­கள் நினை வுக்கு வந்­தார். 2020ஆம் ஆண்டு பள்­ளிப் படிப்பை முடித்த அவரை நாங்­கள் பேட்டி காண முடி­வு­செய்து கடைத்­தொ­குதி ஒன்­றில் சந்­தித்­தோம்.

ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் தற்­போது இரண்டாம் ஆண்டு மாணவியாகப் படிக்கும் அவர், தமிழ் இலக்­கி­யப் பாடம் படித்து வரு­வ­தாக எங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­டார். ஜூரோங் வெஸ்ட் உயர்­நி­லைப் பள்­ளி­யில் அவ­ருக்­குத் தமிழ் ஆசி­ரி­ய­ராக இருந்த திரு­வாட்டி லெட்­சு­மி­தான் தனக்கு முன்­னு­தா­ர­ணம் என்று குறிப்­பிட்ட சரண்யா, அவ­ரைப் போலவே தானும் ஒரு தமி­ழா­சி­ரி­யர் ஆக வேண்­டும் என்ற லட்­சி­யக் கன­வு­டன் படித்து வரு­கி­றார்.

தமிழ்­மொழி மீதுள்ள பற்று சிறு­வ­ய­தி­லேயே ஏற்­ப­ட­வில்லை என்ற சரண்யா, அந்த ஆர்­வம் உயர்

நி­லைப் பள்­ளி­யில்­தான் வந்­தது என்­றார். தொடக்­கப் பள்­ளி­யில் தமிழை வெறும் பள்­ளிப் பாட­மாக மட்­டுமே தான் கரு­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார். தமிழ்­மொழி படிப்­ப­தால் என்ன பயன் என்­று­கூட அந்த கால­கட்­டத்­தில் தான் எண்­ணி­ய­துண்டு என்­றார் அவர். இருப்­பி­னும், உயர்­நி­லைப் பள்­ளி­யில் காலடி எடுத்து வைத்­த­போது தமிழ்மொழி என்­பது பெருங்­க­டல் போன்­றது என்­றும் அதன் ஆழ­மும் அழ­கும் குறை­வில்­லா­தது என்­றும் சரண்யா புரிந்­து­கொண்­டார்.

ஜூரோங் வெஸ்ட் உயர்­நி­லைப் பள்­ளி­யில் தனக்­குப் பல­வ­கை­

யி­லும் உத­வி­யும் ஆத­ர­வும் கிடைத்­த­தாக சரண்யா கூறி­னார். தன் திற­மையை வெளிப்­ப­டுத்த பல வாய்ப்பு­ கள் தரப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

பள்­ளி­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட தன்­மு­னைப்பு பேச்­சு­கள் அவ­ரைச் சிந்­திக்க வைத்­த­து­டன் எதிர்­

கா­லத்­தில் சிறந்த பேச்­சா­ள­ராக உரு­வெ­டுக்­க­வும் ஊக்­கு­வித்­த­

தா­கச் சொன்­னார்.

பல­முறை மனம் துவண்டு போன­தைப் பற்­றி­யும் சரண்யா எங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­டார். 'என்­னால் முடி­யுமா?' என்ற சந்­தே­கம் எழும்­போது அதைத் தட்­டிக்­க­ழித்­து­விட்டு அடுத்து என்ன செய்­ய­லாம் என யோசிப்­ப­தாக அவர் கூறி­னார்.

தற்­போது தொடக்­கக் கல்­லூ­ரி­யில் படிக்­கும் சூழல் பர­ப­ரப்­பா­னது என்று கூறிய சரண்யா, நிறை­ய பொறுப்­பு­க­ளை­யும் தான் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என்­றார். இத­னால் அவ்­வப்­போது தன்­னம்­பிக்­கையை இழப்­பது போன்று தோன்­றி­னா­லும் விடா­மு­யற்­சி­யைக் கைவி­டா­மல் தான் படித்­து­வ­ரு­

வ­தாக சரண்யா குறிப்­பிட்­டார்.

தமிழ் இலக்­கி­யப் பாடத்­தைத் தேர்ந்­தெ­டுக்க விரும்­பும் மாண­வர்­க­ளுக்கு அவர் சில குறிப்­பு

­க­ளை­யும் கூறி­யுள்­ளார்.

தமிழ் இலக்­கி­யம் கடி­ன­மா­ன­தல்ல. இலக்­கி­யத்­தில் சிறப்­புத் தேர்ச்சி பெறு­வ­தற்­குக் கேள்­வி­கள் கேட்க வேண்­டும் என்­றார் அவர்.

இருப்­பி­னும் தமிழ் இலக்­கி­யம் என்­பது கடைசி நிமி­டத்­தில் படிக்­கக்­கூ­டிய ஒரு பாட­மும் அல்ல என்று வலி­யு­றுத்­தி­னார் அவர்.

முயற்­சி­யும் பயிற்­சி­யும் தொடர்ந்து இருக்க வேண்­டும் என்று நினை­வு­றுத்­திய அவர், தொடக்­கக் கல்­லூ­ரி­யில் கதை­கள், சிறு­க­தை­கள், கவி­தை­கள், நாட­கங்­கள் ஆகி­ய­வற்­றைப் படிப்பதன்வழி தமிழ் மொழியை மேலும் ஆழ­மாக நேசிக்­க­லாம் என்­றார்.