இளம் செய்தியாளர்களாக நாங்கள் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவியான விஜயஸ்ரீ ஈஸ்வரனை பேட்டி கண்டோம்.
குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற காலத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சம்பவங்களையும் பற்றி கேட்டு அறிந்தது ஆர்வமூட்டுவதாக இருந்தது. அதேசமயம் அவரது வாழ்க்கைக் கதையைக் கேட்பது எங்களுக்கும் உற்சாகமாக இருந்தது.
"நான் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆனதால் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன்," என்று பேட்டியின்போது எங்களிடம் கூறினார் அவர்.
உயர்நிலைப் பள்ளிக்கு வந்தபோது அமைதியாகவும் தயக்கம் நிறைந்தவராகவும் இருந்தார். அவரது நிலையறிந்து அவரின் தமிழ் ஆசிரியர் அவருக்கு உதவ முன்வந்தார்.
தோழியாக, தாயாக இருந்த அந்த ஆசிரியர் அன்பும் அரவணைப்பும் தந்து தன்னைச் செம்மைப்
படுத்தியதாகக் கூறினார் விஜயஸ்ரீ. மற்றவர்களிடம் கூற முடியாததை விஜயஸ்ரீ தன் ஆசிரியரிடம் கூறினார்.
இவ்வாறு மனதில் உள்ளதை வெளிப்படுத்த முயன்றதால் நாளடைவில் தன்னம்பிக்கையுடன் பிறருடன் பேசிப் பழகும் குணத்தை அவர் பெற்றார்.
மருத்துவத் துறையில் அவருக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. அதனால், அவர் செஞ்சிலுவைச் சங்க இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்தார். இதனால், அவர் உயர்கல்வியிலும் மருத்துவம் தொடர்பான படிப்பை மேற்கொண்டார்.
இன்று தாதி ஆவதற்கு அவர் படித்து வருகிறார். தன்னுடைய சக நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டுள்ளார். விலங்கு
களுக்கு மருத்துவச் சேவை வழங்கும் பணியில் தற்போது அவர் இருக்கிறார். உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை முடிந்த பின்னரும் தன்னுடைய தமிழாசிரியருடன் தொடர்ந்து பேசி வருவதாகப் பகிர்ந்துகொண்டார்.
செய்தி: ஜாய்ஸ்லின் கெட்ஸியா, மகதி தங்கதுரை

