தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை என் குணத்தையும் செதுக்கியது'

3 mins read
a21d34b3-aca9-4b49-8449-4f248a4edb11
'சொற்களம்' விவாதப் போட்டியில் பள்ளியைப் பிரதிநிதித்துப் பேசிய அனுபவத்தால் தனது தன்னம்பிக்கை கூடியது என்கிறார் முன்னாள் மாணவி பூபாஷ்ரி.செய்தி: கணேசன் காவியாஸ்ரீ -

என் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வி­யான 19 வயது பூபாஷ்­ரி­யு­டன் சந்­தித்­துப் பேசி­யது சுவா­ர­சி­ய­மான ஓர் அனு­ப­வ­மாக எனக்கு அமைந்­தது. 2019ஆம் ஆண்­டில் உயர்­நிலைப் பள்­ளிப் படிப்பை முடித்­து­விட்ட நிலை­யில் இன்று ஜூரோங் பய­னி­யர் தொடக்­கக் கல்­லூரி என்று அழைக்­கப்­படும் உயர்­கல்வி நிலை­யத்­திற்­குச் சென்­றார்.

அதை­ய­டுத்து அவர் தற்­போது பொறி­யி­யல் துறை­யில் தன் படிப்­பைத் தொட­ர­வுள்­ளார்.

உயர்­நி­லைப் பள்­ளிக்கு வந்த புதி­தில் தன்­னுள் தயக்­க­மும் சந்­தே­கங்­களும் ஓங்கி நின்­ற­தா­கக் கூறி­னார் பூபாஷ்ரி. இருப்­பி­னும் சுறு­சு­றுப்­பா­கச் செயல்­பட்டு தனக்­குக் கிடைத்த வாய்ப்­பு­கள் அனைத்­தை­யும் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

உயர்­நி­லைப் பள்­ளி­யின் நான்கு ஆண்­டு­களும் தனக்­குச் சுமு­க­மா­கச் சென்­ற­தாக அவர் கூறி­னார். உயர்­நி­லைப் பள்ளி வாழ்க்கை தனக்கு மிக­வும் பிடித்­தி­ருந்­த­தால் ஒவ்­வொரு நாளும் உற்­சா­கத்­து­டன் பள்ளிக்குச் சென்­ற­தாக அவர் நினை­வு­கூர்ந்­தார்.

உயர்­த­மிழ் வகுப்பு, இணைப்­பாட வகுப்பு, போட்­டி­கள் என அனைத்­தி­லும் ஆர்­வம் காட்­டி­ய­து­டன் தலை­மைப் பொறுப்பை ஏற்று கல்­வி­யில் சிறந்­தும் விளங்­கி­ய­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

படிப்பு என்று மட்­டு­மல்­லா­மல் தன் குணத்­தை­யும் செதுக்­கும் ஓர் இட­மாக உயர்­நி­லைப் பள்ளி அமைந்­த­தென அவர் குறிப்­பிட்­டார்.

உயர்­த­மிழ் பயில்­வ­தில் மிகுந்த ஈடு­பாடு கொண்ட அவர், தமிழை மேலும் அதி­கம் நேசித்­த­தா­கக் கூறி­னார்.

உயர்­நிலை 1, 2 ஆகிய நிலை­களில் அவரால் உயர்­த­மிழ் எடுக்க முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டது. இருப்­பி­னும் மனந்­த­ள­ரா­மல் அவர் உயர்­நிலை 3ல் உயர்­த­மிழ் பாடத்தை எடுத்­தார். பல பள்­ளி­கள் பொது­வாக இதனை அனு­ம­திப்­ப­தில்லை. உயர்­நிலை 3ல் உயர்­த­மிழ் படிக்­க­லாம் என்ற வாய்ப்பை வழங்­கு­

வ­தில்லை. இருப்­பி­னும் ஜூரோங் வெஸ்ட் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான பாடத்­தைக் கற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்பை இழக்­கக்­கூ­டாது என்­

ப­தற்­காக பூபாஷ்­ரிக்கு இந்த வாய்ப்பு கிட்­டி­யது.

அது­மட்­டு­மல்­லா­மல் தமிழ் போட்­டி­கள் பல­வற்­றில் அவர் கலந்­து­கொண்­டார்.

அத்­த­கைய போட்­டி­களில் ஒன்­று­தான் 'சொற்­க­ளம்'. இதில் அவர் முக்­கி­யப் பேச்­சா­ள­ராக இடம்­பெற்­ற­து­டன் போட்­டி­யின் காலி­று­திச் சுற்­று­வரை அவ­ரது அணி சென்­றது.

போட்­டிக்­குத் தயார்­செய்து வந்த நிலை­யில், ஆசி­ரி­யர்­கள் அவ­ருக்கு ஊக்­கு­வித்­துப் பெரும் ஆத­ர­வாக இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார். போட்டி அனு­ப­வத்­தால் தன்­னம்­பிக்கை கூடி­யது என்று குறிப்­பிட்ட அவர், தன் திற­மையை நிரூ­பிக்­க­வும் வாய்ப்பு அமைந்­த­தெ­னச் சொன்­னார்.

பள்­ளி­யில் வாழ்க்­கைக்­குத் தேவை­யான திறன்­க­ளை­யும் கற்­றுக்­கொண்­ட­தாக அவர் கூறி­னார். எடுத்­துக்­காட்­டாக, பள்­ளி­யில் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் முகாம்­க­ளை­யும் ஏற்­பாடு செய்­த­தன் மூலம் திட்­ட­மி­டும் ஆற்­ற­லைத் தான் வளர்த்­துக்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

மாண­வர்­க­ளின் கருத்­தைக் கேட்­ட­றிந்து பள்­ளிச் சூழ­லைப் பள்ளி நிர்­வா­கம் மேம்­ப­டுத்தி வரு­வது தன்னை மிக­வும் கவர்ந்த ஓர் அம்­சம் என்­றார் பூபாஷ்ரி. உதா­ர­ண­மாக பள்ளி உண­வ­கத்­தில் விற்­கப்­படும் உணவு குறித்து மாதந்­தோ­றும் ஒரு கணக்­கெ­டுப்பு நடத்­தப்­படும். பொது­வாக மாண­வர்­

க­ளுக்­குப் பிடிக்­காத ஓர் உணவை பள்ளி நிர்­வா­கம் உட­ன­டி­யாக மாற்­றி­வி­டும். மாண­வர்­க­ளின் எண்­ணங்­க­ளுக்­கும் உணர்­வு­க­ளுக்­கும் பள்ளி முக்­கி­யத்­து­வம் கொடுப்­பதை இதன் மூலம் உணர முடி­கிறது.

வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­பது, மாண­வர் நல­னைக் கருத்­தில் கொள்­வது ஆகிய இரண்­டி­லும் பள்ளி கவ­னம் செலுத்தி வரு­வ­தால் பள்­ளிச் சூழலை மேம்­ப­டுத்­த­வும் முடி­கிறது மற்­றும் மாண­வர்­க­ளின் பண்­பு­களை வளர்க்­க­வும் முடி­கிறது என்­றார் பூபாஷ்ரி.

ஆசி­ரி­யர்­க­ளு­டன் எப்­போது வேண்­டு­மா­னா­லும் தொடர்­பு­கொண்டு பேசும் சுதந்­தி­ர­மும் உள்ள நிலை­யில் ஆசி­ரி­யர்- மாண­வ­ருக்­கி­டையே நட்­பு­ணர்வு வளர்ந்­த­தா­கக் கூறி­னார் அவர். மொத்­தத்­தில் உயர்­நி­லைப் பள்­ளி­யில் படித்த அந்த நான்கு ஆண்­டு­கள் தன்னை நல்ல மனி­த­ரா­கச் செதுக்கி உள்­ள­தெ­னக் கூறி­னார் பூபாஷ்ரி.