அத்துமீறி நுழைந்து மானபங்கம் செய்ததாக அதிகாரிமீது குற்றச்சாட்டு

அத்துமீறி நுழைந்து மானபங்கம் செய்ததாக அதிகாரிமீது குற்றச்சாட்டு

2 mins read
0c58a2df-9a95-446b-9b10-2b0245a88f5b
-

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப்­ப­டை­யைச் சேர்ந்த லெஃப்டி­னன்ட் கர்­னல் ஒரு­வர், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள தங்­கு­வி­டு­திக்­குள் அத்­து­மீறி நுழைந்து ஒரு பெண்­ணைத் பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'சினூக்' உட்­பட ஹெலி­காப்­டர்­களை இயக்­கிய அனு­ப­வ­முள்ள 45 வயது நியோ ஏக் சியாவ், நவம்­பர் 13 அன்று அதி­காலை 2 மணி­ய­ள­வில் இக்குற்­றங்­க­ளைப் புரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் ஆகா­யப்­படை குற்­றம் சுமத்­தப்­பட்­ட­வரை அனைத்­துப் பணி­க­ளி­லி­ருந்­தும் இடை­நீக்­கம் செய்­து­விட்­ட­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் நடந்­து­வ­ரு­வ­தால் தற்­காப்பு அமைச்­சும் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யும் இந்த வழக்கு தொடர்­பில் மேற்­கொண்டு கருத்து ஏதும் கூற இய­லாது என்று தற்­காப்பு அமைச்­சின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன் தகுந்த நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து ஆரா­யப்­படும் என்­றும் அறிக்கை குறிப்­பிட்­டது.

குற்­ற­வி­யல் அத்­து­மீ­றல், பாலி­யல் துன்­பு­றுத்­தல் ஆகிய இரண்டு குற்­றச்­சாட்­டு­களும் நியோ­மீது நவம்­பர் 15ஆம் தேதி அன்று சுமத்­தப்­பட்­டன.

நீதி­மன்ற ஆவ­ணங்­க­ளின்­படி, அவர் நவம்­பர் 13 அன்று 18, 21 வய­து­க­ளு­டைய இரண்டு பெண்­க­ளின் அறை­க­ளுக்­குள் அத்­து­மீறி நுழைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வளா­கத்­தி­னுள் நியோ எவ்­வாறு புகுந்­தார் என்­பது குறித்­துத் தக­வல் அறி­யப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், 21 வயது பெண்­ணின் இடது தொடையை வருடி அவர் மான­பங்­கம் செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளின் அடை­யா­ளங்­க­ளை­யும் தங்­கு­மி­டம் பற்­றிய விவ­ரங்­க­ளை­யும் வெளி­யிட முடி­யாது என்று நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

மாண­வர்­க­ளின் பாது­காப்பே தங்­க­ளது தலை­யாய முன்­னு­ரிமை என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது. மேலும் இந்த அத்­து­மீ­றலை மிக­வும் கடு­மை­யாக எடுத்­துக்­கொள்­வ­தா­க­வும் பல்­க­லைக்­க­ழ­கம் விளக்­கியது.

சம்­ப­வத்தை அடுத்து, காவல் துறை­யி­னர் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­திற்கு அழைக்­கப்­பட்­ட­னர். பின்­னர், பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழ­கம் ஆத­ரவு நல்­கி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பாது­காப்­புப் பணி­கள் தீவி­ர­மாக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­ டது.

நியோ­வின் வழக்கு நவம்­பர் 29ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மான­பங்­கம் தொடர்­பான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், குற்­றம் புரிந்­த­வ­ருக்கு ஈராண்டு வரை­யிலான சிறைத் தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி அல்­லது இதில் ஏதே­னும் இரண்டு, மூன்று தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.