சரக்குக் கொள்கலன் அடுக்கு திடீரென சரிந்ததைத் தொடர்ந்து கனரக வாகனம் ஒன்றின் ஓட்டுநர், தப்பிக்கும் முயற்சியில் பக்கத்து இருக்கைக்குத் தாவினார். 30களின் வயதுடைய அந்த இந்திய நாட்டவர் இந்த விபத்தில் நினைவிழந்தார்.
சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் 15ஏ துவாஸ் சவுத் அவென்யூ 12ல் நிகழ்ந்தது. மற்றொரு ஓட்டுநர் இவரை வெளியே இழுத்தார்.
லேசான காயங்களுடன் இங் டெங் ஃபோங் பொது மருத்துவ
மனையில் கனரக வாகன ஓட்டுநர் அனுமதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
இந்த வேலையிட விபத்து தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய வினாக்
களுக்குப் பதிலளித்த அந்தப் பேச்சாளர், சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
விபத்து பற்றிய காணொளி ஒன்று சிங்கப்பூர் இன்ஸிடென்ட்ஸ் என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
பச்சைநிற கனரக வாகனத்தின் ஓட்டுநர் பகுதியை சரக்குக் கொள்கலன் அடுக்கு வாகனம் நசுக்குவதையும் அதன்மேல் ஏராளமான கொள்கலன்கள் விழுவதையும் அந்தக் காணொளி காட்டியது. இரு கொள்கலன்களை சேர்ந்தாற்போலத் தூக்கியபோது அடுக்கு வாகனம் நிலைகுலைந்து, அருகிலிருந்த கனரக வாகனத்தை நோக்கித் திரும்பியதாகவும் அதனைத் தொடர்ந்து கொள்கலன்கள் சரிந்ததாகவும் பேச்சாளர் தெரி வித்தார்.
வென்டி டிரான்ஸ்போர்ட் எண்டர்பிரைஸ் என்னும் நிறுவனம் அந்த ஓட்டுநரை வேலைக்கு அமர்த்தி இருந்தது. தமது நிறு
வனத்தின் ஓட்டுநர் கொள்கலன் ஒன்றை இறக்கிக்கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்ததாக அதன் பேச்சாளர் கூறினார்.

