ஆண்டு இறுதி பண்டிகைக் காலத்தில் பணத்திற்காக சாலையோரத்தில் வேடிக்கை நிகழ்த்தும் (பஸ்கர்ஸ்) நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். டிசம்பர் மாதம் வெள்ளி, சனி நாள்களில் இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை வேடிக்கை காட்சியாளர்கள் சாலையேரத்தில் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
அயன் ஆர்ச்சர்ட், 313@ சோமர்செட் இடையில் எட்டு இடங்களில் அவர்களின் நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்படும்.
அயன் ஆர்ச்சர்ட், விஸ்மா ஏட்ரியா, நீ ஆன் சிட்டி, தி ஹீரன், 313@சோமர்செட், நைட்ஸ்பிரிட்ஜ், மாண்டரின் கேலரி போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியாது.
பாதிக்கப்பட்ட எட்டு நாட்களில் கிறிஸ்துமசுக்கு முன்தினமும் புத்தாண்டுக்கு முன்தினமும் அடங்கும்.
ஆனால் கிறிஸ்துமஸ் தினத்தன்று காட்சியாளர்கள் நிகழ்ச்சியை நடத்தலாம்.
இந்தக் கட்டுப்பாடு விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யு மாறு வேடிக்கையாளர் சங்கம் தேசிய கலைகள் மன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

