வீட்டையும் நாட்டையும் காக்கும் தன்னம்பிக்கை கொடுத்த தேசிய சேவைப் பயிற்சி

வீட்டையும் நாட்டையும் காக்கும் தன்னம்பிக்கை கொடுத்த தேசிய சேவைப் பயிற்சி

2 mins read
2c705aa9-e5ea-48dd-8840-b8dc8c7ef8ea
ஷ்ரிஸ்­டி ­நாத். படம்: தற்காப்பு அமைச்சு -

சிறு வய­தி­லி­லேயே சிங்­கப்­பூ­ரில் குடும்­பத்­து­டன் குடி­யே­றிய ஷ்ரிஸ்­டி­நாத் சர்­தார், அவ­ரது குடும்­பத்­தில் தேசிய சேவை புரி­யும் முதல் ஆளா­கத் திகழ்­கி­றார்.

தேசிய சேவை புரிய கிடைத்த வாய்ப்பை சிறப்­பா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்ற எண்­ணத்­தோடு ஷ்ரிஸ்­டி­நாத் விடா­மு­யற்­சி­யு­டன் செயல்­பட்டு தன்னை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்.

நாட்­டிற்கு சேவை செய்­யும் அரிய வாய்ப்பு தமக்குக் கிடைத்­துள்­ளதை எண்ணி மகிழ்ந்­த­தோடு, தேசிய சேவை புரி­வது தன் வாழ்க்­கை­யின் முக்­கிய அங்­க­மாக அமைந்­துள்­ளது என்று பகிர்ந்­து­கொண்­டார் ஷ்ரிஸ்­டி­நாத், 19.

தற்­காப்பு அமைச்­சால் இம்­மா­தம் 17ஆம் தேதி நடத்­தப்­பட்ட 'ஸ்பெ­ஷ­லிஸ்ட் கெடேட்' பட்­ட­ம­ளிப்பு அணி­வ­குப்­பின்­போது பட்­டம் பெற்ற 795 பேரில் ஷ்ரிஸ்­டி­நாத்­தும் ஒரு­வர்.

அவ­ருக்கு வெள்ளி விரு­தும் வழங்­கப்­பட்­டது.

கல்வி, மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட இந்த அணி­வ­குப்பு, சிங்­கப்­பூர் குடியரசு ஆயுதப் படை, கடற்­படை, ஆகா­யப் படை மற்­றும் மின்­னி­லக்க நுண்­ண­றி­வுச் சேவைப் பிரிவு ஆகி­ய­வற்­றின் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான ஸ்பெ­ஷ­லிஸ்ட் கேடட் படிப்பு முடித்­த­தைக் குறிக்­கும் நிகழ்­வாக அமைந்­தது.

அணி­வ­குப்­பில் பட்­ட­தா­ரி­க­ளி­டம் உரை­யாற்­றிய குமாரி கான், சிங்­கப்­பூ­ரைச் சுற்றி அதிகரித்து வரும் பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­

க­ளி­லி­ருந்து நம்மை பாது­காக்க வலு­வான ஆயு­தப்­ப­டையை உறுதி­ செய்­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­னார்.

பாசிர் லாபா முகா­மில் நடந்­தே­றிய இந்த அணி­வ­குப்­பில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் மூத்த அதி­கா­ரி­க­ளு­டன் பட்­ட­தா­ரி­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் நண்­பர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

தமது தேசிய சேவைப் பய­ணத்­தில் அவ­ரு­டைய பெற்­றோ­ரின் ஊக்­கு­விப்­பும் ஆத­ர­வும் முக்­கிய பங்­காற்­றி­ய­தாக ஷ்ரிஸ்­டி­நாத் கூறி­னார்.

ஆரம்ப காலத்­தில் அதி­க­மான கட்­டுப்­பாடு, கட்­டொ­ழுங்கு போன்ற பண்­பு­களை கடைப்­பி­டிப்­பது கடி­ன­மாக இருந்­த­தா­க­வும் தாம் சந்­தித்த சவால்­கள் மன அழுத்­தத்தை கொடுத்­தா­க­வும் கூறிய அவர், இருப்­பி­னும் பெற்­றோ­ரின் உற்­சா­க­மூட்­டும் ஆலோ­ச­னை­கள் சவால்­களை வெல்ல தனக்­குப் பெரி­த­ள­வில் உத­வி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

"ஆறு மாத கால தேசிய சேவைப் பயிற்­சி­கள் மூலம் பல­

த­ரப்­பட்ட பாடங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன்.

"எனக்கு வழங்­கப்­பட வாய்ப்­பு­கள், தலை­மைப் பொறுப்­பு­கள் என்னை இன்­னும் மேம்­ப­டுத்­தி­யுள்­ளன.

"அதோடு, சிங்­கப்­பூர் சூழ­லில் தேசிய சேவை­யின் முக்­கி­யத்­

து­வத்தை என்­னால் புரிந்­து­கொள்ள முடிந்­தது.

"வீட்­டை­யும் நாட்­டை­யும் என்­னால் பாது­காக்க முடி­யும் என்ற நம்­பிக்கை என்­னுள் அதி­க­ரித்­துள்­ளது," என்று தமது தேசிய சேவை அனு­ப­வம் பற்றி பெரு­மை­யு­டன் கூறி­னார் ஷ்ரிஸ்­டி­நாத்.