சிங்கப்பூருக்கு வந்த ஒரு வாரத்தில் இரண்டு நாய்க்குட்டிகள் உயிரிழந்தது பற்றி விசாரணை

சிங்கப்பூருக்கு வந்த ஒரு வாரத்தில் இரண்டு நாய்க்குட்டிகள் உயிரிழந்தது பற்றி விசாரணை

2 mins read
c8ee9a24-c5a1-454b-92cf-7e6ad452aa7e
சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் முன் நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறினாலும் அதற்கான சான்று இல்லை. படம்: குமாரி சென் -

அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத விற்­ப­னை­யா­ள­ரி­ட­மி­ருந்து வாங்­கப்­பட்ட இரண்டு கார்கி இன நாய்க்­குட்­டி­கள், சிங்­கப்­பூர் வந்த ஒரு வாரத்­திற்­குள் உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை விலங்கு, கால்­நடை மருத்­து­வச் சேவை ஆணை­யம் விசா­ரித்து வரு­கிறது.

மலே­சி­யா­வி­லி­ருந்து இந்த நாய்க்­குட்­டி­களை வாங்­கி­ய­தாக குமாரி சென் என்­ப­வர் கூறி­னார்.

அவர் தனது முழுப் பெய­ரை­யும் பணி­யை­யும் கூற மறுத்­து­விட்­டார். நாய்க்­குட்­டி­க­ளுக்கு விலை­யா­க­வும் விநி­யோ­கச் செலவு மற்­றும் அவற்­றின் உண­வுக்­கா­க­வும் $6,400 தொகையை விற்­ப­னை­யா­ள­ருக்கு அனுப்­பி­ய­தாக அவர் தெரி­வித்­தார்.

அக்­டோ­பர் 27ஆம் தேதி நாய்க்­குட்­டி­கள் சிங்­கப்­பூ­ரில் உள்ள குமாரி சென் வீட்­டுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டன. ஆனால், மறு­நா­ளில் இருந்து அந்­தக் குட்­டி­கள் நோய்­வாய்ப்­பட்­டன. வயிற்­றுப் போக்கு ஏற்­பட்­ட­து­டன் ஒரு குட்­டி­யின் வாயில் நுரை தள்­ளி­யது.

நாய்க்­குட்­டி­க­ளுக்கு 'கேனைன் பார்­வோ­வை­ரஸ்' எனப்­படும் தொற்று­ நோய் இருப்­ப­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது. சிகிச்சை அளித்­தும் இரு நாய்க்­குட்­டி­கள் நவம்­பர் 2, 3ஆம் தேதி­களில் இறந்­து­விட்­டன.

இரு குட்­டி­க­ளை­யும் காப்­பாற்­றும் முயற்­சி­யில் மருத்­து­வச் செல­வாக $12,000 செல­வ­ழித்­த­தாக குமாரி சென் தெரி­வித்­தார்.

குமாரி சென் நாய்­குட்­டி­களை அவ­ரி­டம் விற்­ற­வ­ருக்கு தொடர்பு செய்ய முயற்சி செய்­தார். ஆனால், விற்­ப­னை­யா­ளர் குமாரி சென்­னுக்கு பணத்தை திருப்­பித் தரவோ அவை மாண்­ட­தற்கு பொறுப்பு ஏற்­கவோ மறுத்­து­விட்­டார்.

மலே­சி­யா­வி­லி­ருந்து கொண்­டு­ வ­ரப்­படும் விலங்­கு­க­ளுக்கு தடுப்­பூசி போட வேண்­டும். நாய்க்­குட்­டி­கள் இரண்­டும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்­த­தா­க­வும் அவற்­றுக்கு ஒரு தடுப்­பூசி போடப்­பட்­ட­தா­க­வும் குமாரி சென்­னி­டம் கூறப்­பட்­டது. ஆனால், போட்­ட­தாக விற்­ப­னை­யா­ளர் கூறி­னா­லும் அதற்­கான ஆவ­ணங்­கள் இல்லை என்று குமாரி சென் கூறி­னார். இந்த சம்­ப­வத்­தி­னால் தாம் மிக­வும் பதிப்­ப­டைந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.