சைமெக்ஸ் எனப்படும் சிங்கப்பூர் அனைத்துலக பணப் பரிவர்த் தனை சந்தையைச் சேர்ந்த இணைய முகவரி என்று காட்டி போலியான முகவரிகளைப் பயன்படுத்தி மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
அந்த இணைய நாணய மோசடியில் சிக்கி ஐந்து அமெரிக்க முதலீட்டாளர்கள் US$10 மில்லியனுக்கும் (S$13.8மில்லியன்) அதிக தொகையைப் பறி கொடுத்து உள்ளனர்.
மோசடிக்காரர்கள் கடந்த மே மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.
அந்தச் சட்டவிரோத பேர்வழிகள், இணைய நாணய மோசடியில் அப்பாவிகளைச் சிக்க வைத்து போலியான இணையத்தளங்களில் முதலீடு செய்யும்படி அவர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.
நம்பி முதலீடு செய்தவர்களின் பணம் தனியார் பைகளுக்குப் போய்விட்டது என்று அமெரிக்காவின் சட்ட அமைச்சு திங்கள்கிழமை தெரிவித்தது.
முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் வராமல் அவர்களை நம்பவைக்க வேண்டும் என்பதற்காக மோசடிப் பேர்வழிகள், சைமெக்ஸ் சந்தை இணையத்தளங்களைப் போன்ற போலியான ஏழு இணையத்தளங்களை உருவாக்கினர்.
அந்த முகவரிகளின் வழியாக முதலீட்டாளர்கள் வருநிலை வர்த்தகம் என்ற பெயரில் நிதி உடன்பாடுகளை உள்ளடக்கிய வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
அந்த இணையத்தளங்களை முடக்கும்படி அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லுமுல்லுப் பேர்வழிகள் இணையத்தளங்களைப் பயன்படுத்தி இணைய முகவரிகளை உருவாக்குவார்கள். அந்த முகவரி கள் நம்பத்தகுந்த நிறுவனங்களின் முகவரிகள் போல இருக்கும்.
ஆனால், அந்த முகவரிகளைப் பயன்படுத்தி செயல்படும்போது அப்பாவிகள் இணைய மோசடிப் பேர்வழிகளின் போலித் தளங்களில் பணத்தை இழந்துவிடுவர்.

