யுஓபி வங்கியும் பிசினஸ் டைம்ஸ் (பிடி) செய்தித்தாளும் சேர்ந்து விருது ஒன்றைத் தொடங்குகின்றன.
அந்த விருது, சிங்கப்பூரில் சுற்றுச்சூழலைக் காப்பதில் தலைமைத்துவப் பங்காற்றுகின்ற தனிப்பட்டவர்களையும் நிறுவனங்களையும் அங்கீகரித்துப் பாராட்டும்.
'சுற்றுச்சூழல் நற்பலன் விருது' என்று அந்தப் புதிய விருது குறிப்பிடப்படும்.
புதிய விருது, சுற்றுச்சூழலிலும் சமூகத்திலும் கணிசமான அளவுக்கு ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்ற மக்களையும் நிறுவனங்களையும் அடையாளம் கண்டு அவர்களைக் கொண்டாடி மகிழும்.
தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள் என்று இரண்டு வகை விருதுகள் இருக்கும்.
நிறுவனங்கள் பிரிவில் ஒன்று சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உரியதாகும். மற்றொன்று பெரிய நிறுவனங்களுக்கு உரியதாகும்.
ஒவ்வொரு பிரிவும் முதன்மையான ஒருவரையும் ஐந்து பேர் வரைப்பட்ட உன்னத விருதாளர்களையும் அடையாளம் காணும்.
விருது பற்றிய விவரங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விருது பற்றி கருத்து தெரிவித்த பிடி ஆசிரியர் சென் ஹுய்ஃபென், தனிப்பட்டவர்கள் நிறுவனங்களில் சுற்றுச்சூழலுக்குத் தொண்டாற்றும் உண்மையான சாதனையாளர்களைச் சிறப்பிப்பது நோக்கம் என்றார்.
இந்த விருது மேலும் பலரும் சுற்றுச் சூழலுக்குத் தொண்டாற்ற ஊக்கமூட்டும் என்று யுஓபி தலைமை அதிகாரி எரிக் லிம் கூறினார்.

