காவல்துறை அதிகாரி மீது லஞ்சக் குற்றச்சாட்டு

காவல்துறை அதிகாரி மீது லஞ்சக் குற்றச்சாட்டு

1 mins read
ef48fa21-270c-412b-bb7a-6a29859290cb
மொத்தம் பத்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் காவல்துறை அதிகாரி பூ ட்ஸீ சியாங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

காவல்­துறை அதி­காரி ஒரு­வர், கட­னா­கவும் ரொக்­க­மா­க­வும் லஞ்­சம் வாங்­கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது. பூ ட்ஸீ சியாங், 45, என்ற அந்த அதி­காரி மீது நேற்று குற்­றம் சமத்­தப்­பட்­டது.

அவர் லஞ்­சம் தொடர்­பான ஏழு குற்­றச்­சாட்டுகளை எதிர் நோக்­கு­கி­றார். நீதி நடை­முறைக்கு இடை­யூ­றாக இருந்­தி­ருக்­கி­றார் என்று கூறப்­படும் மூன்று குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் எதிர்­நோக்­கு­கி­றார்.

கார்­டெல் சான் யுயென் குவாங், வாங் ஹுவாட் ஆகிய இரண்டு பேரி­டம் இருந்து கடந்த 2019ஆம் ஆண்­டி­லும் 2020 ஆம் ஆண்­டி­லும் அந்த அதி­காரி, ஏழு முறை மொத்­தம் $32,500 லஞ்­சம் வாங்கி இருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

லஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டின் பேரில் குற்­ற­வாளி என்று தீர்ப்­பளிக்­கப்­பட்­டால் ஒரு குற்­றச்­சாட்டின் பேரில் அவ­ருக்கு ஐந்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை­யும் $100,000 வரைப்­பட்ட அப­ரா­த­மும் விதிக்க முடி­யும்.

நீதி நடை­மு­றைக்கு இடை­யூறாக இருந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தால் ஒவ்­வொரு குற்­றச்­சாட்டின் பேரிலும் அவ­ருக்கு அப­ரா­த­மும் ஏழு ஆண்டு­கள் வரைப்­பட்ட சிறைத் தண்­டனை­யும் விதிக்க சட்­டத்­தில் இடம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.