யுனெஸ்கோ மரபுடைமைப் பட்டியலில் 'கெபாயா' உடை: 4 நாடுகள் பரிந்துரை

2 mins read
0b15ec5c-82c1-4475-8f40-5ea089000bf5
மலாய், பெரனாக்கான் உள்ளிட்ட சமூகங்களின் பெண்கள் அணி யும் கெபாயா உடை. படம்: ஆசிய நாகரிக அரும்பொருளகம் -

மலே­சியா, தாய்­லாந்து, புருணை நாடு­க­ளு­டன் இணைந்து, 'கெபாயா' எனப்­படும் மலாய், பெரா­னக்­கான் சமூ­கத்­தி­ன­ரின் பாரம்­ப­ரிய உடையை யுனெஸ்­கோ­வின் தொட்­டு­ணர முடி­யாத கலா­சார மர­பு­டை­மைப் பட்­டி­ய­லுக்கு முன்­மொ­ழி­ய­வுள்­ளது சிங்­கப்­பூர்.

சிங்­கப்­பூ­ரின் முதல் யுனெஸ்கோ பன்­னாட்டு முன்­மொ­ழி­வான இது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தில் சமர்ப்­பிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் மலாய் சமூக மர­பு­டை­மை­யில் முக்­கிய பங்கு வகிக்­கும் கெபாயா, தென்­கி­ழக்­கா­சி­யா­வில் உள்ள தனித்­து­வ­மான கலா­சார சிறப்­பு­க­ளைப் பறை­சாற்­று­வ­தாக கூறி­யது, தேசிய மர­பு­டைமைக் கழகம்.

மலாய், சீன, இந்­திய, ஐரோப்­பிய பண்­பாட்டுக் கூறு­கள் கெபா­யா­வின் வேலைப்­பா­டு­களில் பிரதி­ ப­லிக்­கப்­ப­டு­வ­துண்டு.

சிங்­கப்­பூ­ரில் பாரம்­ப­ரிய, சமூக நிகழ்­வு­க­ளுக்கு அணி­யப்­ப­டு­வ­து­டன், கெபா­யா­வா­னது டிக்கிர் பாராட், டொண்­டாங் சாயாங், வாயாங் பெர­னக்­கான் ஆகிய மலாய் பாரம்­ப­ரி­யக் கலை­க­ளி­லும் இடம்­பெ­று­கிறது.

அவ்­வ­கை­யில், நமது பல்­லின கலா­சா­ரத்­தின் ஒரு குறி­யீ­டாக அது விளங்­கு­வ­தோடு, நமது துறை­முக மர­பு­டை­மை­யி­லும் அது பங்கு வகிப்­ப­தாக கழகம் சுட்­டி­யது.

இவ்­வாண்­டின் தொடக்­கத்­தில் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளைக் கூட்டி இந்த பன்­னாட்டு முன்­மொ­ழி­வைக் குறித்து மலே­சியா ஆலோ­சித்­ததை தொடர்ந்து, சிங்­கப்­பூர் அதில் பங்­கு­பெற முடி­வெ­டுத்­த­தா­கக் கூறி­யது கழகம்.

கெபாயா அணி­யும் முறை­கள், அதன் கலை­நய நுட்­பங்­கள், தையல் வேலைப்­பாடு மற்­றும் வடி­வ­மைப்­பு­கள் முத­லி­ய­வற்றை வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்­கும் கொண்டு செல்­வதை நோக்­க­மா­கக் கொண்டு இம்­முன்­மொ­ழி­வில் பங்­கு­பெ­று­வ­தா­க­வும் கழகம் குறிப்­பிட்­டது.

கெபா­யா­வைத் தயா­ரிப்­ப­தி­லும் அணி­வ­தி­லும் அதன் மர­பு­க­ளைப் பாது­காத்­துப் பேணு­வ­தி­லும் உள்ள கலா­சா­ரக் கூறு­கள் இந்த நான்கு நாடு­க­ளி­லும் வேறு­பட்­டி­ருந்­தா­லும், அடி­நா­த­மாக விளங்­கும் அம்­சங்­க­ளைக் கொண்டு கெபாயா இப்­பட்­டி­ய­லுக்கு முன்­மொ­ழி­யப்­ப­டு­கிறது.

இப்­பா­ரம்­ப­ரி­யத்­தைக் கட்­டிக்­காப்­ப­தற்­கான பரிந்­து­ரை­களை அறிய, இவ்­வாண்டு ஆகஸ்ட், அக்­டோ­பர் மாதங்­களில் நடத்­தி­யது போன்று அடுத்த ஆண்­டும் பொது­மக்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்த தேசிய மர­பு­டைமைக் கழகம் ஏற்­பாடு செய்­ய­வுள்­ளது.