புற்றுநோய்க்கு இட்டுச் செல்லக்கூடிய மூளைக்கட்டியால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் அவதிப்பட்ட இஸாத் ஹக்கிம் ஷரிஃப் (படம்), ஒரு கட்டத்தில் பேசமுடியாமல் சித்திரவதை அனுபவித்தார். நடக்க இயலாத நிலையில் கிட்டத்தட்ட அரையாண்டு காலம் படுத்த படுக்கையில் இருந்ததால் பள்ளிக்
கூடம் செல்ல இயலவில்லை. பல மாதங்கள் கதிரியக்க சிகிச்சைக்கும் கீமோதெரபி சிகிச்சைக்கும் இஸாத் செல்ல வேண்டி இருந்தது. கோங்ஷாங் தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை 6ல் பயின்றபோது 2019ஆம் ஆண்டு பிஎஸ்எல்இ தேர்வை அவரால் எழுத இயலவில்லை. சிகிச்சைக்குப் பின் ஓரளவு பலமடைந்த அவர், தமது குடும் பமும் பள்ளிக்கூடமும் அளித்த ஆதரவால் இவ்வாண்டு படிப்பைத் தொடர்ந்தார்; தேர்வையும் எழுதினார். இவ்வாண்டு பிஎஸ்எல்இ தேர்வில் தேறிய மாணவர்களில் 15 வயது இஸாத்தும் ஒருவர். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தமது தேர்ச்சிச் சான்றிதழை நேற்று பெற்றுச் சென்றார் இஸாத்.

