ஹங்காங்கில் உள்ள ஒரு அடுக்கு வீட்டில் நேற்று பிற்பகல் தீப்பற்றியதைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
20 பேர் அவர்களின் இருப்
பிடங்களில் இருந்து அகற்றப்பட்டனர். தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றுக்கு மின்னேற்றியபோது தீப்பற்றியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புளோக் 699 ஹவ்காங் ஸ்திரீட் 52ன் ஐந்தாவது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததாக தங்களுக்குப் பிற்பகல் 2.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
படையினர் சென்றபோது அந்த வீட்டில் புகை மண்டியிருந்தது. இருப்பினும் அவர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டின் சமையலறையில் இருந்து மீட்கப்பட்ட இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் தனித்தனியாகக் சொண்டு செல்லப்பட்டனர். அந்த புளோக்கில் இருந்து 20 குடி
யிருப்பாளர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர்.