பேருந்து ஓட்டுநரை தாக்கிய மாதுக்கு 8 வாரச் சிறை

பேருந்து ஓட்டுநரை தாக்கிய மாதுக்கு 8 வாரச் சிறை

1 mins read
231b3de5-c57c-4a99-a028-df8c918b5c5d
-

தான் இறங்க வேண்­டிய பேருந்து நிறுத்­தத்­தில் இறங்க மறந்துவிட்ட பயணி ஒருவர், பேருந்தை நிறுத்­தா­மல் சென்றதாக ஓட்­டு­ந­ர் மீது பழிபோட்டு அவரைத் தாக்­கினார். அந்தப் பயணிக்கு எட்டு வாரச் சிறைத் தண்­டனை நேற்று விதிக்­கப்­பட்­டது. டான் சுன் ஃபெங் என்ற அந்த 38 வயது பெண் பயணி, டவ­ர் டிரான்­சிட் நிறு­வ­னத்­தின் 34 வயது சோங் கொக் லியாங் எனும் பேருந்து ஓட்­டு­ந­ரைத் தகாத வார்த்­தை­க­ளால் திட்டி அவ­ரது முகத்­தில் அறைந்­தார்.

கடந்த மாதம் 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இச்­சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. தோ பாயோ பேருந்து சந்திப்பு நிலையத்தில் பேருந்துச் சேவை எண் 143ல் ஏறினார். பின்னர் கம்போங் பாருவில் உள்ள கெப்பல் டிஸ்ரிபார்க்கில் அவர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தைத் தவறவிட்டார்.

பின்னர் அந்தப் பழியை பேருந்து ஓட்டுநர் மீது போட்டு, அவரை சரமாரி யாகத் திட்டியதுடன் அவரது முகக்கவசத்தை அகற்ற முயன்றுள்ளார்.