பெட்டி, பெட்டியாக சுங்கவரி செலுத்தாமல் கடத்தப்பட்ட சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் தொடர்பில் ஈசூனில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஈசூன் இஸ்டஸ்டிரியல் ஸ்திரீட் 1ல் உள்ள தொழில் கட்டடத்தின் ஓர் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களிலிருந்து சுங்கவரி செலுத்தப் படாத 512 கார்ட்டன், 759 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து 28 முதல் 33 வயது வரையிலான மூன்று மலேசியர்கள் கைதாகினர்.
வாகனங்களில் ரகசிய இடத்தை உருவாக்கி சிகரெட்டுகளை அவர்கள் மறைத்து வைத்திருந்ததாக நேற்று வெளியிட்ட தகவலில் சுங்கத் துறை தெரிவித்தது.
இரண்டு வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றையும் சிகரெட் கடத்து வதற்காக அவர்கள் பயன்படுத்தினர் என நம்பப்படுகிறது.
சுங்கவரி செலுத்தாத சிகரெட்டுகளை வாகனங்களிலிருந்து இறக்குவதற்காக மலேசியாவைச் சேர்ந்த ஒரு நபரை அவர்கள் வேலைக்கு அமர்த்தியிருந்தனர். கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளுக்கு மொத்தம் செலுத்த வேண்டிய சுங்க வரி $50,200, பொருள் சேவை வரி 3,900 வெள்ளி. சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

