நிலநடுக்கத் துயர்: நன்கொடைக்கு கோரிக்கை

நிலநடுக்கத் துயர்: நன்கொடைக்கு கோரிக்கை

1 mins read
2dcb888f-6182-4af1-ba5d-8e4214f5bf0b
-

இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நிதி தந்து உதவுமாறு பொது மக்களுக்கு சிங்கப்பூர் செஞ் சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நிதித் திரட்டு டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப் படும் என்றும் திரட்டப்படும் நிதி, துயருறும் மக்களுக்கு உணவு, மருத்துவ நிவாரணம் மற்றும் அவசரகால கூடாரங் களை அமைக்க உதவும் என்றும் சங்கம் கூறியுள்ளது. முன்னதாக, $69,000 நிதி திரட்ட அது உறுதி தெரி வித்தது. இத்துடன், சிங்கப்பூர் அரசாங்கம் $100,000 உதவிக்கு கடப்பாடு தெரிவித்தது. இணைய நன்கொடைக்கு https://redcross.sg/donate-westjava