பல்வேறு மோசடிகளில் தொடர்பு இருந்ததற்காக 321 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் 9.6 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட தொகையை இழந்தனர்.
சந்தேக நபர்களுக்கு 998க்கும் மேற்பட்ட மோசடிகளில் தொடர்பு இருந்ததாகக் கருதப்படுகிறது.
அவர்கள் 16 வயதிலிருந்து 72 வயது வரையிலானவர்கள். அவர்களில் 197 பேர் ஆடவர்கள், 124 பேர் பெண்கள்.
நண்பர்கள் போல் கைப்பேசியில் அழைத்து நடித்தது, சிங்கப்பூர் மற்றும் சீனாவின் அரசாங்க அதிகாரிகள் போல நடித்தது, போலி முதலீடுகள், வேலை தருவதாக ஆசை காட்டியது, இணையக் காதல் மோசடி, கடன் மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் அவர்களுக்கு தொடர்பிருந்தது.
வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் ஏழு நிலப்பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் இரு வாரங்களாக நடத்திய சோதனைகளில் அவர் கள் பிடிபட்டனர்.
அத்துடன் இணைய விளையாட்டுகள் தொடர்புள்ள மோசடிச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக காவல்துறை கூறியது.
தங்கள் இணைய விளையாட்டுக் கணக்குகளை விற்க விரும்பு வோர் போலி இணையத்தளங்களில் அதற்கான நிர்வாகக் கட்டணத்தைச் செலுத்தி ஏமாறுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைந்தது 21 பேர் அவ்வகை மோசடிகளில் சிக்கி, சுமார் 86,000 வெள்ளியை இழந்துவிட்டனர்.

