சட்டவிரோத இணைய சூதாட்ட தளங்கள் வழி பந்தயம் கட்டி சூதாடுவது சட்டத்தை மீறிய ஒரு செயலாகும்.
அத்தகைய குற்றத்தைச் செய்வோருக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அத்தகைய சில இணையத்தளங்கள் தங்களுடைய சேவைகளைச் சிங்கப்பூரர்களிடம் சந்தைப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அவற்றின் மூலம் சூதாடுவது ஒரு குற்றச் செயல் என்பதை அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடப்புக்கு வந்த சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, அத்தகைய செயல் ஒரு குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் மட்டும்தான் லாட்டரி சூதாட்டம், விளையாட்டுச் சூதாட்டச் சேவைகளை நடத்த உரிமம் பெற்று இருக்கிறது.
உரிமம் பெறாமல் சேவை வழங்கக்கூடிய அமைப்பிடம் பந்தயம் கட்டி சூதாடி இருப்பதாகத் தெரியவந்தால், குற்றவாளிக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது $10,000 வரை யிலான அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கும்.
காவல்துறை காலக்கிரம முறைப்படி அமலாக்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

