மருத்துவர் ஹரேஷ்: விரும்பிச் செய்தால் சுமை தெரியாது

மருத்துவர் ஹரேஷ்: விரும்பிச் செய்தால் சுமை தெரியாது

2 mins read
c35d3d45-3d21-444c-ab5f-349f6f7d71d3
-

ஆண்­டர்­சன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் 2007ஆம் ஆண்டு முதல் 2008ஆம் வரை பயின்ற ஹரேஷ், உயி­ரி­யல், கணி­தம், தமிழ் இலக்­கி­யம், வேதி­யி­யல் ஆகிய பாடங்­களைக் கற்­றார்.

படிப்­பில் தேர்ச்சி பெற்­ற­தோடு தமிழ்­மொழி, நட­னம் மற்­றும் விவாத மன்­றத்­தின் தலை­வ­ரா­க­வும் சேவை­யாற்­றி­னார்.

தற்­பொ­ழுது அவர் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் குடும்­ப­நல மருத்­து­வ­ராக இருக்­கி­றார்.

கல்­லூ­ரி­யில் படித்த அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­ட­போது, தனக்­குப் பாடம் கற்­பித்த ஆசி­ரி­யர்­கள் புத்­த­கத்­தில் இருந்­ததை மட்­டும் கற்­பிக்­கா­மல் வாழ்க்­கைக்­குத் தேவை­யான பண்­பு­க­ளை­யும் கற்­பித்­துள்­ள­னர் என்­றார் டாக்­டர் ஹரேஷ்.

தான் இன்று ஒரு மருத்­து­வ­ரா­கக் பணி­பு­ரி­வ­தற்கு தமிழ் இலக்­கி­யம் ஒரு முக்­கி­யக் கார­ணம் என்றார் ஹரேஷ்.

தனது மருத்­துவ நேர்­கா­ண­லில் தான் படித்த ஒரு புத்­த­கத்­தைப் பற்றி எழு­தச் சொன்­ன­போது, 'ஆசிய ஜோதி' புத்­த­கத்­தைப் பற்றி எழு­தி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இப்­பொ­ழுது ஒரு மருத்­து­வ­ராக அவ­ரது வாழ்க்கை பர­ப­ரப்­பாக நகர்ந்து கொண்­டி­ருந்­தா­லும் அதை அவர் விரும்­பிச் செய்து வரு­வ­தால் இது அவ­ருக்கு ஒரு பார­மா­கவே தெரி­ய­வில்லை என்று பகிர்ந்­து­கொண்­டார்.

தான் 'டிஎல்­டி­டி­எஸ்' தலை­வ­ராக இருந்­த­போது தன் ஆற்­ற­லில் பல­ரும் நம்­பிக்கை இல்­லா­மல் இருந்­த­தாக நினை­வு­கூர்ந்­தார் ஹரேஷ்.

இருப்­பி­னும், அவர் அதைப் பொருட்­ப­டுத்­தா­மல் தன் பொறுப்பு­களைச் சிறப்­பாக ஆற்­று­வ­தில் கவ­னம் செலுத்­தி­னார்.

தமிழ்­மொ­ழி­யின் மீது தான் கொண்ட ஆர்­வம், தனக்கு மட்­டும் பய­ன­ளிக்­காது தன் பள்­ளிக்­கும் பெருமை சேர்க்­கும் வகை­யில் பல்­வேறு தமிழ் சார்ந்த நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்து அவற்­றைத் திற­மை­யாக வழி­ந­டத்­தி­யும் உள்­ளார் அவர்.

"இன்­றைய கல்­லூரி வாழ்க்கை சவால்­கள் நிறைந்­தது. பர­ப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லில் கல்­விக் கற்­ற­லை­யும் இணைப்­பாட நட­வ­டிக்­கை­களை­யும் சரி­ச­ம­மாக மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

"நேரத்­தைச் சரி­யாக வகுத்து அதைப் பின்­பற்­றி­னால் இவை இரண்­டை­யும் நாம் சிறப்­பாக ஆற்ற முடி­யும்," என்று திரு ஹரேஷ் கூறி­யது இன்­றைய மாண­வர்­க­ளுக்கு உற்­சா­கம் அளிக்­கும் சொற்­க­ளா­கும்.

மேலும், கல்­லூரி நாட்­களில் நண்­பர்­க­ளின் துணை மிக­வும் அவ­சி­யம் என்­றும் மருத்­து­வர் ஹரேஷ் கூறு­கி­றார்.

பள்­ளி­யி­லும் தமிழ் வகுப்­பி­லும் அவர் பெற்ற நண்­பர்­கள் இன்­று­வரை அவ­ரு­டன் நெருங்கிய தொடர்­பில் உள்­ள­னர் என்­றார் அவர்.

பேட்டி கண்ட மாணவர்கள்: மஹாலெட்சுமி, அகிலேஷ் ராம்