தொழில்நுட்பத் துறையில் 1,270 பேர் ஆட்குறைப்பு

தொழில்நுட்பத் துறையில் 1,270 பேர் ஆட்குறைப்பு

1 mins read
dfc5c6d7-5f2a-491b-a7be-7d8056f53447
மனிதவள அமைச்சர் டான் சீ லெங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

இவ்­வாண்டு ஜூலை முதல் நவம்­பர் வரை 1,270 சிங்­கப்­பூர்­வா­சி­கள் வேலை­யி­லி­ருந்து ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­தாக சிங்­கப்­பூ­ரில் உள்ள தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­யுள்­ளார். இவ்­வாண்டு முற்­பா­தி­யில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட 260 சிங்­கப்­பூர்­வா­சி­க­ளை­விட இது கிட்­டத்­தட்ட ஐந்து மடங்கு அதி­க­மா­கும்.

தொழில்­நுட்­பத் துறை­யில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை, அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் ஆத­ரவு குறித்து நேற்று ஒன்­பது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்­குப் டாக்­டர் டான் நேற்று பதில் அளித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் மெட்டா, கோட்டூ போன்ற தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் அடுத்­த­டுத்து ஆட் குறைப்பு செய்­தன.

ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட 1,270 ஊழி­யர்­களில் பத்து பேரில் எட்டு பேர், விற்­பனை, விளம்­ப­ரம் போன்ற தொழில்­நுட்­பம் சாராத பணி­க­ளைச் செய்­த­னர் என்று அவர் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்­வாண்டு வரை ஜூன் வரை 790 சிங்­கப்­பூர்­வா­சி­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யுள்­ளது.