இளம் பெண்களை தந்திரமாக ஏமாற்றி தனது இச்சைக்குப் பயன் படுத்திக் கொண்ட சீன நாட்டவர் மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் 57 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
சீன நாட்டைச் சேர்ந்த 34 வயது தொழில்நுட்பரான லின் ரோங்ஸின், இளம் பெண்களை எப்படி தந்திரமாக ஏமாற்றி பாலியல் பலாத்காரத்துக்கு பயன்படுத்திக் கொண்டதை நீதிமன்றத்தில் விவரித்தார்.
பதினான்கு முதல் 19 வயது வரையுள்ள மூன்று இளம்பெண் களுக்கு முதலில் வலைவிரித்த அவர், தனக்கு ஆபாச படங்களை அனுப்பும்படி செய்தார்.
அப்போது, தன்னை 19 வயது லின் ஷி ஸுவான் என அவர் காட்டிக் கொண்டார். சில சம்பவங் களில் ஹுவாங் யி என்பவருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று இளம் பெண்களை அவர் வலியுறுத்தினார்.
ஆனால் ஹுவாங் யியும் அவரே என்பது பெண்களுக்குத் தெரியாது.
பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட பிறகு மிரட்டிய நபரிட மிருந்து அவர்களை காப்பாற்றுவதாக லின் கூறினார்.
இதனை நம்பிய மூன்று பெண் களும் அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டனர்.
மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு களையும் அவர்களின் நிர்வாணப் படங்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டிய குற்றச்சாட்டையும் ஒரு பெண் குளிக்கும்போது ரகசியமாக படம்பிடித்த குற்றச்சாட்டையும் நேற்று நீதிமன்றத்தில் லின் ஒப்புக் கொண்டார்.
தோ பாயோவில் தொழிற்பேட்டை கட்டடத்தில் உள்ள கழிவறையிலும் பாலஸ்டியர் ஹோட்டல் அறையிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன.
நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் சோங் கீ இன், இருபது பெண்கள் சம்பந்தப்பட்ட 64 குற்றச்சாட்டுகளை லின் எதிர்நோக்குவதாகக் கூறி னார்.
குற்றச்செயல்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், லின்னுக்கு 22 முதல் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படி களும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அடுத்த மாதம் 5ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அப்போது லின்னுக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. லின், 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். தங்குவிடுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார்.

