தேசிய நூலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 400க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், 'சிங்பாஸ்', 'பேலா' போன்ற அத்தியாவசியமான செயலிகளை முறையாகப் பயன் படுத்துவதைக் கற்றுக் கொண்டனர். மோசடிகளை அடையாளம் காணவும் அவர்களுக்கு பயிற்சியளிக்கப் பட்டது.
முதலாவது, அறிவார்ந்த தேச தாத்தா, பாட்டியருக்கான தினம் தேசிய நூலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக 400க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள் பற்றி கற்றுத்தரப்பட்டன.
பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் அறிவார்ந்த தேச மின்னிலக்க அரசாங்க அலுவலகம் இதற்கு ஏற்பாடு செய்தது.
நவம்பர் 27ஆம் தேதி தாத்தா, பாட்டியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இவ்வாண்டின் அறிவார்ந்த தேச தாத்தா, பாட்டியர் தினம், மூத்தோர் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 100க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் மின்னிலக்கச் சேவைகளில் மூத்தோர் எவற்றை விரும்புகிறார்கள், குடும்பப் பிணைப்புக்கு தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பது பற்றி கண்டறியப்பட்டது.
இதையடுத்து நேற்றைய நிகழ்ச்சி நடந்தது.
ஆய்வில் பங்கேற்ற 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், மூத்த தலைமுறையினர் திறன்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும், மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி என்பதைக் கற்றுகொள்ள வேண்டும் என்று கூறினர்.
'வாட்ஸ்அப்' தவிர்த்து இளைய தலைமுறையினருடன் தொடர்பில் இருக்க எந்தச் செயலிகளைப் பயன்படுத்துவது என்பது உறுதி யாக தெரியவில்லை என்று அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்பில் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர்கள் கூறினர்.
விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் 'லயன்ஸ் பீஃபிரெண்டர்ஸ்' மூத்த தொண்டூழியர்களுக்கான அமைப்பு 'ஆர்எஸ் விபி'. சிண்டா ஆகியவற்றைச் சேர்ந்த மூத்தோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், திறன்பேசி மற்றும் சமூக ஊடகங்கள் மக்களுக்கான உறவு களை பராமரிக்கும் முறையை மாற்றியமைத்துள்ளன என்றார்.
"இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்ப உறுப் பினர்களின் தொடர்பை இழப்பது எளிதாகிவிடும்.
"சிலருக்கு தனிமையான உலகமாக மாறிவிடும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
முதியவர்களுக்கு குடும்ப உறவு மிகவும் முக்கியம் என்பதால் அன்றாட வாழ்க்கையில் தேவையான மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

