உணவங்காடி நிலையங்களில் மேசையை சுத்தம் செய்ய தானி யக்க இயந்திரங்களைப் பயன் படுத்துவது குறித்து தேசிய சுற்றுப்புற வாரியம் ஆராய்ந்து வருகிறது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் ஆள்பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட உணவங்காடிகளிலும் உணவுக் கடைகளிலும் மூன்று மாத காலத்திற்கு இயந்திர மனிதனை சோதித்து பார்க்கவிருக்கிறோம் என்று வாரியத்தின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளார்.
மேசையைத் தூய்மையாக்கும் இயந்திர மனிதனின் செயல்பாடு பல அம்சங்களில் மேம்படுத்த வேண்டியுள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி கோரிய அறிவிப்பில் உணவுத் தட்டை திருப்பி வைக்கும் கொள்கையால் ஊழியர்களின் பணிச் சுமை குறைந்திருக்கிறது என்று வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இருந்தாலும் காலியான மேசையைத் துடைத்து தூய்மையாக்கு வதற்கு தானியக்க சாதனங்கள் தேவைப்படுவதாக வாரியம் தெரிவித்து உள்ளது.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உணவுத் தட்டுகளைத் திருப்பி வைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
அப்படியும் துப்புரவாளர்கள் மேசையை சுத்தம் செய்ய வேண்டிஉள்ளது.
தட்டுகளில் எஞ்சியுள்ள உணவை அகற்றி கழுவ அனுப்ப வேண்டியிருக்கிறது. மேசையை சுத்தம் செய்யும் தானியக்க சாதனங்கள் இருந்தால் ஊழியர் களுக்கு பேருதவியாக இருக்கும் என்று வாரியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
தானியக்க இயந்திரம், ஒரு நிமிடத்தில் மேசையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நிமிடத்திற்குள் ஒரு மேசையிலிருந்து மற்றொரு மேசைக்கு செல்ல வேண்டும் என்று ஒப்பந்தப் புள்ளியில் வாரியம் தெரிவித்துள்ளது.

