திருமணம் தொடர்பான கொள்கைகளைப் பற்றி முடிவெடுக்க நாடாளுமன்றம்தான் சரியான தளம் என்றும் பொது வாக்கெடுப்பு மூலம் முடிவெடுப்பது அல்ல என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி முடிவெடுப்பது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பாக, சவால்மிக்க சமுதாய விவகாரங்
களுக்கு அது மிகவும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஒரே ஒரு முறை மட்டுமே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1962ஆம் ஆண்டில் மலேசியாவுடன் இணைவது தொடர்பாக முடிவெடுக்க அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நாட்டின் இறையாண்மை தொடர்பான விவகாரங்கள், ராணுவம் மற்றும் காவல்துறையின் அதி
காரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கேள்வி எழும்போது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார் அமைச்சர் மசகோஸ்.
திருமணம் தொடர்பான கொள்கைகளை நாடாளுமன்றம் முடிவெடுப்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவா அழைப்பு விடுத்திருந்தார்.
அவ்வாறு செய்தால்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமையைத் தவிர்ப்பதற்குச் சமமாகிவிடும் என்றார் திரு
மசகோஸ்.
பிரெக்சிட் தொடர்பாக பிரிட்
டனில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பை அவர் உதாரணம் காட்டி னார்.
மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பிரெக்சிட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆனாலும் பலர் அதிருப்தி அடைந்து இரண்டாவது பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததை அமைச்சர் மசகோஸ் நினைவூட்டினார்.
இதற்குப் பதிலளித்த திருவாட்டி புவா, 377A சட்டப்பிரிவை நீக்க ஆதரவு தெரிவித்ததன் மூலம் சவால்மிக்க விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கும் ஆற்றல் இருப்பதை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நிரூபித்துள்ளதாகக் கூறினார்.
திருமணம் தொடர்பான கொள்கைகள் குறித்து பொதுமக்
களிடையே அதிக ஆர்வம் நிலவுவதை திருவாட்டி புவா சுட்டினார்.
அதுதொடர்பாக முடிவெடுக்க சிறப்பு நிபுணத்துவம் தேவையில்லை என்று தெரிவித்த திருவாட்டி புவா, அதில் பொதுமக்களின் பங்கேற்பு மிக பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார்.
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுப்பதே சரி என்றும் அத்தகைய விவகாரங்கள் தொடர்பாக முடி
வெடுக்கும்போது அரசியல் ரீதி
யாகத் தீர்வு காண்பது முக்கியம் என்றார் அமைச்சர் மசகோஸ்.
"பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்து அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கி, முடிவெடுத்துள்ளோம்.
"கடமையைச் செய்யாமல் நீதிமன்றத்திடம் விவகாரத்தை
ஒப்படைத்துவிட்டு தப்பிவிடவில்லை.
"அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வதற்கான நேரம் கனிந்துவிட்டது. இவ்வளவு காலமாக நமது சமுதாயம் கட்டிக்காத்த அமைதியையும் நிலைத்
தன்மையையும் நிலைநாட்டி முன்னோக்கிச் செல்ல வேண்டும்," என்று அழைப்பு விடுத்தார்
அமைச்சர் மசகோஸ்.

