ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றப் பட்டியலி
லிருந்து நீக்குவது தொடர்பாகவும் திருமணம் தொடர்பான கொள்கைகள் குறித்தும் பாட்டாளிக் கட்சி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்சி என்ற முறையில் முடிவெடுக்காமல் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்க அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அது அனுமதி வழங்கியதை அவர் சுட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் பாட்டாளிக் கட்சியினர் கடமையாற்ற தவறிவிட்டதாக திரு சண்முகம் குறைகூறினார்.
இதற்கு பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் மறுப்பு தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற விவாதத்தில் பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.
பாட்டாளிக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் 377A சட்டப்பிரிவு நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தையும் மூவர் எதிர்த்ததையும் அவர் சுட்டினார். அரசமைப்புச் சட்ட திருத்தத்தை ஏழு பேர் ஆதரித்ததாகவும் வாக்
களிக்கப்போவதில்லை என்று இருவர் கூறிவிட்டதாகவும் திரு சிங் தெரிவித்தார்.
377A சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது பாட்
டாளிக் கட்சி அதன் கொறடாவை நீக்கியது உண்மையான ஜனநாயகத்துக்கு அழகல்ல என்றார் அமைச்சர் சண்முகம்.
"கொறடாவை நீக்குவதன் மூலம் தமது நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூறுவர் என்று திரு சிங் தெரிவித்திருந்தார். இதில் எவ்வித உண்மையும் இல்லை.
"நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் உண்மையாக இருந்து தங்கள் கருத்துகளை வெளிப்
படையாகக் கூற வேண்டும்," என்றார் திரு சண்முகம்.
மக்கள் செயல் கட்சி கொறடாவை நீக்கவில்லை என்ற
போதிலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை முன்வைத்ததாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

